என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகர்கோவிலில் கமல்ஹாசன் உருவப்பொம்மை எரிப்பு- இந்து முன்னணியினர் போராட்டம்
Byமாலை மலர்14 May 2019 11:39 AM GMT (Updated: 14 May 2019 11:39 AM GMT)
நாகர்கோவிலில் இன்று சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசிய கமல்ஹாசனின் உருவப்பொம்மையை எரித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார். அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவிலில் இன்று நடிகர் கமல்ஹாசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசேரி சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணியினர் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதாவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கமல்ஹாசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை நடுரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அருகில் உள்ள கடைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து உருவப்பொம்மை மீது ஊற்றி தீயை அணைத்தனர்.
போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மிசா சோமன், குழிச்சல் செல்லம், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பாரதிய ஜனதா நிர்வாகிகள் நாகராஜன், முத்துராமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசினார். அவரது கருத்துக்கு பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவிலில் இன்று நடிகர் கமல்ஹாசனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசேரி சந்திப்பில் நடந்த இந்த போராட்டத்தில் இந்து முன்னணியினர் மட்டுமல்லாமல் பாரதிய ஜனதாவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் கமல்ஹாசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் கமல்ஹாசனின் உருவப்பொம்மையை நடுரோட்டில் போட்டு தீவைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அருகில் உள்ள கடைகளில் இருந்து குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து உருவப்பொம்மை மீது ஊற்றி தீயை அணைத்தனர்.
போராட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த மிசா சோமன், குழிச்சல் செல்லம், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், பாரதிய ஜனதா நிர்வாகிகள் நாகராஜன், முத்துராமன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X