search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 வயது குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பெண் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ருசிகரம்
    X

    2 வயது குழந்தைக்கு பெயர் வைக்க சொன்ன பெண் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ருசிகரம்

    பெயர் வைக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தைக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலினை பெயர் வைக்கும்படி கூறிய பெண்ணால், பிரசார கூட்டத்தில் சிரிப்பலை உண்டானது. #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் சந்தைப்பேட்டையில் பிரசார வாகனத்தில் நின்றபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தனது 2 வயது பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கூறி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வாகனத்தின் மேல் பகுதிக்கு அனுப்பி வைத்தார்.

    அந்த குழந்தையை வாங்கி பார்த்த உதயநிதி ஸ்டாலின் என்னம்மா இன்னுமா இந்த குழந்தைக்கு பெயர் வைக்கல? என கேட்டபடியே குழந்தையிடம் உனது பெயர் என்னம்மா? என்று கேட்டார். அப்போது அந்த குழந்தை தனது பெயர் ‘சோபிகா’ என கூறியது. குழந்தையின் மழலைக்குரல் உதயநிதி ஸ்டாலின் கையில் வைத்திருந்த ‘மைக்’ மூலம் ஒலிப்பெருக்கியில் எதிரொலித்தது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலினும் சிரித்தபடியே குழந்தைக்கு இந்த பெயரே நன்றாக தான் உள்ளது என கூறி தாயிடம் குழந்தையை ஒப்படைத்தார். #LokSabhaElections2019 #UdhayanidhiStalin
    Next Story
    ×