என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருப்பரங்குன்றம் மேம்பாலத்தில் வேன்-பஸ் மோதல்: அய்யப்ப பக்தர்கள் காயம்
திருப்பரங்குன்றம்:
கடலூரில் இருந்து 17 அய்யப்ப பக்தர்கள் வேன் மூலம் சபரிமலை சென்றனர். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு இன்று காலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்தனர்.
அதே போன்று ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் வந்த பக்தர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் சென்றனர்.
இன்று காலை 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள மூலக்கரை மேம்பாலத்தில் எதிர்பாராத விதமாக பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கிய அய்யப்ப பக்தர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். வேன் டிரைவர் பால முருகனின் கால் முறிந்தது.
இதே வேனில் வந்த செல்வம், தங்கதுரை, நடராஜன் ஆகிய 3 அய்யப்ப பக்தர்களும் காயமடைந்தனர். 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேம்பாலத்தில் நடந்த இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மதுரை கரிமேடு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்