search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் ஆளுநரின் காரை மறிக்க முயன்ற பொதுமக்கள்
    X

    திருவாரூரில் ஆளுநரின் காரை மறிக்க முயன்ற பொதுமக்கள்

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்த ஆளுநர், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றபோது அவரது காரை மறிக்க பொதுமக்கள் முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #GajaCyclone #BanwarilalPurohit #Thiruvarur
    திருவாரூர்:

    தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்து வருகிறார். இன்று திருவாரூர் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில் ஆளுநரின் வாகனம் மேட்டுப்பாளையம் கிராமத்தைக் கடந்து சென்றபோது அவரது காரை மறிக்க அப்பகுதி பொதுமக்கள் முயற்சி செய்தனர். அதற்குள் ஆளுநரின் வாகனம் அந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. பின்னால் அதிகாரிகள் வந்த காரை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



    புயலால் தங்கள் வீடுகள் இடிந்துள்ள நிலையில், இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை, இன்னமும் மின்சாரம் வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கூறினர். #GajaCyclone  #BanwarilalPurohit #Thiruvarur

    Next Story
    ×