search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவில் அருகே காதல் திருமணம் செய்த பெண் போலீசின் கணவருக்கு வெட்டு
    X

    சங்கரன்கோவில் அருகே காதல் திருமணம் செய்த பெண் போலீசின் கணவருக்கு வெட்டு

    காதல் திருமணம் செய்த பெண் போலீசின் கணவரை உறவினர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகேயுள்ள கரிவலம்வந்தநல்லூரை அடுத்த மலையடிப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் (வயது32). இதே ஊரை சேர்ந்தவர் திருப்பதி (35). இவரின் அக்காள் மகள் முத்துநாகவள்ளி. இவர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாக உள்ளார். முத்துநாகவள்ளிக்கும் மாரீஸ்வரனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

    இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெரியவர்கள் பேசி முடிவு செய்து இருவருக்கும் திருமணம் நடந்தது. முத்துநாகவள்ளியை திருப்பதி திருமணம் செய்ய விரும்பினாராம். ஆனால் வள்ளி அதற்கு மறுத்துவிட்டார்.  இது தொடர்பாக மாரீஸ்வரனுக்கும் திருப்பதிக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. 

    இந்நிலையில் நேற்று மாலை மாரீஸ்வரன் தெற்கு மலையடிப்பட்டி அருகில் உள்ள பாலத்தின் அருகில் அமர்ந்து தனது மனைவி வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த திருப்பதி இதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். அவர் தான் பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பி  ஓடி விட்டாராம். அரிவாள் வெட்டில்  பலத்த காயம் அடைந்த மாரீஸ்வரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    பெண் போலீசார் வள்ளி கண்முன்னே அவரது கணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய திருப்பதியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×