என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
Byமாலை மலர்18 Jun 2018 5:29 AM GMT (Updated: 18 Jun 2018 5:29 AM GMT)
கபினி அணையில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #metturdam #cauveryriver #kabinidam
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று 11 ஆயிரத்து 297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 101.90 அடியாக உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும்.
கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 81.08 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து கபினி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி கடந்த 14-ந்தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
முதலில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த நாள் இந்த அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லை பகுதியை கடந்து ஒகேனக்கல் வந்தடைந்தது.
ஒகேனக்கலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த 2 வாரமாக பெய்த பலத்த மழை காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று 11 ஆயிரத்து 297 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 101.90 அடியாக உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும்.
கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 81.08 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3 அடியே தேவைப்படுகிறது. இதையடுத்து கபினி அணையில் இருந்து பாதுகாப்பு கருதி கடந்த 14-ந்தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
முதலில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த நாள் இந்த அளவு 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லை பகுதியை கடந்து ஒகேனக்கல் வந்தடைந்தது.
ஒகேனக்கலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து காலை 9 மணிக்கு விநாடிக்கு 29 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இரவு 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை 2-வது நாளாக நீடிக்கிறது. இதற்கிடையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் இன்று ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 23 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
மேட்டூர் அணைக்கு அடிபாலாறு வழியாக சீறிபாய்ந்து வரும் தண்ணீர்
கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேற்று காலை அடிபாலாறு பகுதிக்கு வந்து சேர்ந்தது. பிற்பகல் மேட்டூர் அணைக்கு வர தொடங்கியது. தொடக்கத்தில் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 15 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் அணைக்கு 32 ஆயிரத்து 421 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு இன்று 9 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது.
நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நீர்திறப்பு இன்று காலை 729 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
நீர்வரத்து காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடந்த காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களின் கூடாரங்களை மேடான பகுதிக்கு மாற்றி சென்றனர்.
காவிரி கரையில் விதைக்கப்பட்டிருந்த எள், கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட தானிய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. #metturdam #cauveryriver #kabinidam
நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று காலை 40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.05 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் திறப்பை விட நீர்வரத்து பல மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டம் கிடு கிடுவென உயர தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் குறைந்ததால் கபினி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு இன்று 9 ஆயிரத்து 599 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருகிறது.
நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 35 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நீர்திறப்பு இன்று காலை 729 கனஅடியாக குறைக்கப்பட்டது. இன்னும் ஓரிரு நாளில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
நீர்வரத்து காரணமாக பல மாதங்களாக வறண்டு கிடந்த காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றில் முகாமிட்டு இருந்த மீனவர்கள் தங்களின் கூடாரங்களை மேடான பகுதிக்கு மாற்றி சென்றனர்.
காவிரி கரையில் விதைக்கப்பட்டிருந்த எள், கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட தானிய பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. #metturdam #cauveryriver #kabinidam
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X