என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைவிடாது கொட்டி தீர்த்த மழை - பவானி ஆற்றில் 5வது நாளாக தொடர்ந்து வெள்ளப் பெருக்கு
Byமாலை மலர்13 Jun 2018 7:43 AM GMT (Updated: 13 Jun 2018 7:43 AM GMT)
இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இன்று காலை 6 மணி நிரவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தற்போது அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதே போல் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள காந்த வயலில் பவானிசாகர் அணை நீர்த் தேக்கப்பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருந்தது.
இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்து உள்ளது. நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டியில் இன்று ரம்யமான சூழல் இருந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த இடைவிடாத மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
பில்லூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 100 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேரம் செல்லச் செல்ல பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. காலை 10 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரம் தண்ணீர் வரத்தொடங்கியது. அணையின் நீர்மட்ட உயரத்தை ஒரே சீராக வைத்திருக்க அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று மாலை 5 மணிக்கு அணைக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இன்று காலை 6 மணி நிரவரப்படி அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. தற்போது அணையில் 97 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வரும் 14 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று 5-வது நாளாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதே போல் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிகள் கடல் போல் காட்சி அளிக்கிறது.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள காந்த வயலில் பவானிசாகர் அணை நீர்த் தேக்கப்பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாழைகள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் இருந்தது.
இந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை சற்று குறைந்து உள்ளது. நேற்று இரவு லேசான மழை பெய்தது. இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டியில் இன்று ரம்யமான சூழல் இருந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X