என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![நடிகை சுருதி நடிகை சுருதி](https://img.maalaimalar.com/Articles/2018/Jan/201801151037026586_police-plan-to-investigate-the-actress-shruthi-in-custody_SECVPF.gif)
X
நடிகை சுருதி
நடிகை சுருதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்
By
மாலை மலர்15 Jan 2018 5:07 AM GMT (Updated: 15 Jan 2018 5:07 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
திருமண ஆசை காட்டி வாலிபர்களை ஏமாற்றி வசூலித்த பணத்தை சினிமா துறையில் முதலீடு செய்தாரா என்பது குறித்து நடிகை சுருதியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கோவை:
திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மயக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த கோவையை சேர்ந்த நடிகை சுருதி (வயது 21) என்பவரை சேலத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவருக்கு உதவியாக இருந்த தாய் சித்ரா(47), இவரது 2-வது கணவர் பிரசன்னா வெங்கடேஷ்(37), தம்பி சுபாஷ்(19) ஆகியோரையும் கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.
அவரிடம் இருந்து 15 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க வைர நகைகள் மற்றும் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மேக்-அப் செட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடிகை சுருதி பயன்படுத்திய செல்போனை வைத்து அவர் எத்தனை பேரை ஏமாற்றி பணம் மோசடி செய்து உள்ளார் என்ற பட்டியலை சைபர் கிரைம் போலீசார் தயாரித்து வருகின்றனர்.
நடிகை சுருதி மீது ஏற்கனவே 8 பேர் மோசடி புகார் அளித்திருந்தநிலையில் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (30) உள்பட மேலும் 3 பேர் அவர் மீது மோசடி புகார் அளித்துள்ளனர். இதனால் இதுவரை சுருதி மீது மோசடி புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
போலீசார் நடிகை சுருதியின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் நடிகை சுருதியின் கவர்ச்சி படங்கள், கவர்ச்சி நடன வீடியோக்கள் இருந்தது. மேலும் நடிகை சுருதிக்கு தமிழகத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களின் நட்பு இருப்பது தெரிய வந்தது.
இதில் உள்ள ஏராளமானோர் சுருதி கைது செய்யப்பட்ட விபரம் தெரியாமல் அவரை திருமணம் செய்ய காத்து இருப்பதும் தெரிய வந்தது. எனவே போலீசார் நடிகை சுருதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கினர்.
நடிகை சுருதி இதுவரை இளைஞர்களை ஏமாற்றி ரூ. 5 கோடிக்கு மேல் மோசடி செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்யவில்லை.
மேலும் அவரது பெயரில் உள்ள 3 வங்கி கணக்கில் பணமும் இல்லை. எனவே அவர் இளைஞர்களிடம் ஏமாற்றிய பணத்தை என்ன செய்தார் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. நடிகை சுருதி ஆடிபோனால் ஆவணி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர்களின் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி உள்ளார். திரை உலகத்தை சேர்ந்த சிலருடனும், சின்னத்திரை நடிகர்களுடனும் அவர் தொடர்பு வைத்து இருந்தார்.
எனவே சுருதி மோசடி பணத்தை சினிமா துறையில் முதலீடு செய்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொங்கல் விடுமுறைக்கு பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். #TamilNews
திருமண ஆசை காட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மயக்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த கோவையை சேர்ந்த நடிகை சுருதி (வயது 21) என்பவரை சேலத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவருக்கு உதவியாக இருந்த தாய் சித்ரா(47), இவரது 2-வது கணவர் பிரசன்னா வெங்கடேஷ்(37), தம்பி சுபாஷ்(19) ஆகியோரையும் கைது செய்து கோவை ஜெயிலில் அடைத்தனர்.
அவரிடம் இருந்து 15 விலை உயர்ந்த செல்போன்கள், ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க வைர நகைகள் மற்றும் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மேக்-அப் செட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடிகை சுருதி பயன்படுத்திய செல்போனை வைத்து அவர் எத்தனை பேரை ஏமாற்றி பணம் மோசடி செய்து உள்ளார் என்ற பட்டியலை சைபர் கிரைம் போலீசார் தயாரித்து வருகின்றனர்.
நடிகை சுருதி மீது ஏற்கனவே 8 பேர் மோசடி புகார் அளித்திருந்தநிலையில் அமெரிக்காவில் என்ஜினீயராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (30) உள்பட மேலும் 3 பேர் அவர் மீது மோசடி புகார் அளித்துள்ளனர். இதனால் இதுவரை சுருதி மீது மோசடி புகார் அளித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
போலீசார் நடிகை சுருதியின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் நடிகை சுருதியின் கவர்ச்சி படங்கள், கவர்ச்சி நடன வீடியோக்கள் இருந்தது. மேலும் நடிகை சுருதிக்கு தமிழகத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் இளைஞர்களின் நட்பு இருப்பது தெரிய வந்தது.
இதில் உள்ள ஏராளமானோர் சுருதி கைது செய்யப்பட்ட விபரம் தெரியாமல் அவரை திருமணம் செய்ய காத்து இருப்பதும் தெரிய வந்தது. எனவே போலீசார் நடிகை சுருதியின் பேஸ்புக் பக்கத்தை முடக்கினர்.
நடிகை சுருதி இதுவரை இளைஞர்களை ஏமாற்றி ரூ. 5 கோடிக்கு மேல் மோசடி செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்யவில்லை.
மேலும் அவரது பெயரில் உள்ள 3 வங்கி கணக்கில் பணமும் இல்லை. எனவே அவர் இளைஞர்களிடம் ஏமாற்றிய பணத்தை என்ன செய்தார் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. நடிகை சுருதி ஆடிபோனால் ஆவணி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர்களின் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி உள்ளார். திரை உலகத்தை சேர்ந்த சிலருடனும், சின்னத்திரை நடிகர்களுடனும் அவர் தொடர்பு வைத்து இருந்தார்.
எனவே சுருதி மோசடி பணத்தை சினிமா துறையில் முதலீடு செய்தாரா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொங்கல் விடுமுறைக்கு பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)