என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கலில் டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி
Byமாலை மலர்21 Oct 2017 7:23 AM GMT (Updated: 21 Oct 2017 7:23 AM GMT)
நாமக்கல் நகராட்சி கொண்டிசெட்டி பட்டி பகுதியை சேர்ந்த ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ரோஷிணி டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இறந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி 38-வது வார்டு கொண்டிசெட்டிபட்டி கணபதி நகர் பகுதியை சேர்ந்த யோகேந்திரன்-திவ்யா தம்பதியினரின் மகள் ரோஷிணி (வயது 6). இவர் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த ரோஷிணிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மகளுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் மருத்துவர்கள் மெத்தன போக்கோடு செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
நாமக்கல் நகராட்சி 38-வது வார்டு கொண்டிசெட்டிபட்டி கணபதி நகர் பகுதியை சேர்ந்த யோகேந்திரன்-திவ்யா தம்பதியினரின் மகள் ரோஷிணி (வயது 6). இவர் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த ரோஷிணிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தனது மகளுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் மருத்துவர்கள் மெத்தன போக்கோடு செயல்பட்டதே உயிரிழப்புக்கு காரணம் என்று பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X