என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க.வினர் இணைந்து செயல்பட வேண்டும்: எம்.பி. இல.கணேசன்
Byமாலை மலர்7 Aug 2017 7:58 AM GMT (Updated: 7 Aug 2017 7:58 AM GMT)
தனித்தனியாக பிரிந்துள்ள அ.தி. மு.க.வினர் இணைந்து செயல்பட்டு மீதமுள்ள 4 ஆண்டுகளில் ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும் என எம்.பி. இல.கணேசன் கூறியுள்ளார்.
விழுப்புரம்:
கம்பன் கழகம் சார்பில் விழுப்புரத்தில் கம்பன் விழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் குழப்பமாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா என்னும் மிகப்பெரும் ஆளுமை விட்டு சென்ற இடத்தை அக்கட்சியினரால் நிரப்ப முடியவில்லை. தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருவதை மக்களும் விரும்பவில்லை. பா.ஜனதாவும் விரும்பவில்லை.
எனவே தனித்தனியாக பிரிந்துள்ள அ.தி. மு.க.வினர் இணைந்து செயல்பட்டு மீதமுள்ள 4 ஆண்டுகளில் ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும். இது தான் அவர்கள் மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான மரியாதை ஆகும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல் நான் மற்றும் எங்களது கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்துக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்க முடியும், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது ‘நீட்’ என மத்திய அரசு நினைக்கிறது.
தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளித்தால், சரியாக இருக்குமா, அதற்கு வேறு என்ன செய்யலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கம்பன் கழகம் சார்பில் விழுப்புரத்தில் கம்பன் விழா கடந்த 4-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது அரசியல் சூழல் குழப்பமாகவே இருந்து வருகிறது. ஜெயலலிதா என்னும் மிகப்பெரும் ஆளுமை விட்டு சென்ற இடத்தை அக்கட்சியினரால் நிரப்ப முடியவில்லை. தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வருவதை மக்களும் விரும்பவில்லை. பா.ஜனதாவும் விரும்பவில்லை.
எனவே தனித்தனியாக பிரிந்துள்ள அ.தி. மு.க.வினர் இணைந்து செயல்பட்டு மீதமுள்ள 4 ஆண்டுகளில் ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும். இது தான் அவர்கள் மறைந்த முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யும் உண்மையான மரியாதை ஆகும்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுகிறார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோல் நான் மற்றும் எங்களது கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகளான நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரும் வலியுறுத்தி உள்ளோம். தமிழகத்துக்கு மட்டும் எப்படி விலக்கு அளிக்க முடியும், அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது ‘நீட்’ என மத்திய அரசு நினைக்கிறது.
தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளித்தால், சரியாக இருக்குமா, அதற்கு வேறு என்ன செய்யலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும், இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என நான் வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X