search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோல்வி பயத்தில் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் 1095 மதிப்பெண் பெற்று பள்ளியில் 4-வது இடம்
    X

    தோல்வி பயத்தில் தற்கொலை செய்த பிளஸ்-2 மாணவன் 1095 மதிப்பெண் பெற்று பள்ளியில் 4-வது இடம்

    தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்-2 மாணவர் 1095 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் 4-வது இடத்தை பிடித்தார்.
    பாகூர்:

    கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில் புதுநகரை சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மகன் மணிகண்டன் (வயது 18). இவர், பாகூரில் உள்ள அரசு நிதிஉதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 பயின்று தேர்வு எழுதி இருந்தார்.

    இதற்கிடையே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் கடந்த 9-ந்தேதி மணிகண்டன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. அப்போது தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் மணிகண்டன் 1095 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார்.

    மேலும் பள்ளி அளவில் 4-வது இடத்தையும் பிடித்திருந்தார். இதனை பார்த்த பள்ளி ஆசிரியர்களும், மணிகண்டனுடன் படித்த சக மாணவ-மாணவிகளும் சோகத்துக்கு உள்ளானார்கள்.

    மேலும் இந்த தகவல் அறிந்த மணிகண்டனின் பெற்றோரும் சோகம் அடைந்தனர்.

    Next Story
    ×