search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது
    X

    14.5 ஓவரிலேயே 105 ரன்னை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரை 3-1 என வென்றது

    கடைசி ஒருநாள் போட்டியில் 14.5 ஓவரிலேயே 105 ரன்களை எட்டி இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. முதலில பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஜடேஜாவின் (4) அபார பந்து வீச்சால் 104 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக தவான், ரோகித் சர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை முதலில் சந்திக்க இருவரும் திணறினார்கள். தவான் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் அரைசதம் அடிக்க இந்தயா 14.5 ஓவரிலேயே 105 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-1 எனக்கைப்பற்றியது.
    Next Story
    ×