என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்த டி வில்லியர்ஸ்
Byமாலை மலர்16 Feb 2018 1:08 PM GMT (Updated: 16 Feb 2018 1:08 PM GMT)
செஞ்சூரியனில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் 30 ரன்கள் எடுத்த டி வில்லியர்ஸ் சாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். #SAvIND #ABD
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்த அணியில் புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷம்சி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டு சோண்டோ, பெஹார்டியன், மோரிஸ், இம்ரான் தஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மார்கிராம், அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 23 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்லா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்கள்.
மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். 4-வது மற்றும் ஐந்தாவது போட்டியில் ஏமாற்றம் அளித்த டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் ரசிகர்களை குஷி படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 34 பந்தில் 4 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷம்சி, ரபாடா, டுமினி, மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டு சோண்டோ, பெஹார்டியன், மோரிஸ், இம்ரான் தஹிர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
மார்கிராம், அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தென்ஆப்பிரிக்கா அணி 23 ரன்கள் எடுத்திருக்கும்போது அம்லா 10 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்கள்.
மார்கிராம் 30 பந்தில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். 4-வது மற்றும் ஐந்தாவது போட்டியில் ஏமாற்றம் அளித்த டி வில்லியர்ஸ் இந்த போட்டியில் ரசிகர்களை குஷி படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாஹல் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அவர் 34 பந்தில் 4 பவுண்டரியுடன் இந்த ரன்னை எடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X