search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South Africa vs India"

    • முதல் டெஸ்ட் மேட்சில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வென்றது
    • ஐபிஎல் தோன்றியதும் பல பேஸ் பவுலர்கள் வந்து விட்டனர் என்றார் கவாஸ்கர்

    தென் ஆப்பிரிக்காவில், இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினருக்கு இடையே 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் மேட்ச் தொடர் நடைபெற்றது.

    முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியுற்றது.

    நேற்று, கேப் டவுன் நகரில் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இரண்டாம் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் ஆடியது.

    இந்திய வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜஸ்பித் பும்ரா மற்றும் முகேஷ் குமார், இருவரும் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    சிராஜ், 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது பவுலிங் வரலாற்றில் சாதனை நிகழ்வாகும்.

    இந்திய வேகப்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்து 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனார்கள்.

    இறுதியில் இந்திய அணி வென்று, தொடரை சமன் செய்தது.


    இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    அனைத்து புகழும் கபில் தேவையே சாரும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சாளராக மட்டுமே இருக்க வேண்டிய கட்டாயமில்லை என நிரூபித்தவர் அவர்.

    தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் புது பந்து பவுலிங் செய்யும் போது சாதகமான சூழ்நிலை நிலவும்.

    கிரிக்கெட் உலகம் வியக்கும் வகையில் இந்திய அணிக்கு பலம் சேர்க்க வேகப்பந்து வீச்சாளர்கள் தோன்றியுள்ளனர். அதிலும் குறிப்பாக ஐபிஎல் (IPL) தோன்றிய பிறகு கடந்த 10-12 வருடங்களில் இந்தியாவில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகி உள்ளனர்.

    வலது கரம் மற்றும் இடது கரம் என இரண்டு வகையிலும் சிறப்பாக பந்து வீச பவுலர்கள் தற்போது உண்டு. ஒருவர் இல்லையென்றால் அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் இருக்கிறார். பும்ரா இல்லாத போது ஷமி களமிறங்கி திறமையை வெளிப்படுத்தினார்.

    இவையனைத்துமே கபில் தேவிற்கு நாம் செலுத்தும் மரியாதையாகும்.

    இவ்வாறு கவாஸ்கர் தெரிவித்தார்.

    நாளை மறுநாள் இந்தியாவிற்காக கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வென்ற அணியின் கேப்டன் கபில் தேவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்
    • டிப்ரஷன், பிரஷர் என்பதெல்லாம் அமெரிக்க வார்த்தைகள் என்றார் கபில்

    தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி இரு-போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பாக்ஸிங் டே (Boxing Day) எனப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுதினமான டிசம்பர் 26-ல் முதல் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதாக இருந்த தொடக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து விலகி கொண்டுள்ளார்.

    இப்பின்னணியில், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தொடர்ச்சியாக விளையாடும் வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த பிரச்சனைகள் குறித்து 1983ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்தியாவிற்காக கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் 2022ல் "சாட் வித் சாம்பியன்ஸ்" (chat with champions) எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் கபில் தேவ் தெரிவித்ததாவது:

    ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்டவும், மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஐபிஎல் போட்டியிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக விளையாடுவதாக வீரர்களுக்கு தோன்றினால் ஐபிஎல்-லில் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஐபிஎல் தேசத்திற்கான விளையாட்டு அல்ல. உங்களுக்கு மனதளவில் களைப்பு உருவானால் ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் தவறில்லை. க்ளப் கிரிக்கெட் (ஐபிஎல்) வேறு, நாட்டிற்காக விளையாடுவது வேறு. டிப்ரஷன், பிரஷர் என்பவை அமெரிக்க வார்த்தைகள்; அவை எனக்கு புரிவதில்லை. நான் ஒரு விவசாயி. விளையாட்டை மகிழ்ச்சியுடன் அணுகும் போது பிரஷர் ஏற்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு கபில் கூறினார்.

    ×