search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "December 26"

    • மன அழுத்தம் காரணமாக இஷான் கிஷன் போட்டியிலிருந்து விலகியுள்ளார்
    • டிப்ரஷன், பிரஷர் என்பதெல்லாம் அமெரிக்க வார்த்தைகள் என்றார் கபில்

    தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணி இரு-போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பாக்ஸிங் டே (Boxing Day) எனப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு மறுதினமான டிசம்பர் 26-ல் முதல் போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் இந்திய அணியில் விளையாடுவதாக இருந்த தொடக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷன், மன அழுத்தம் காரணமாக போட்டியிலிருந்து விலகி கொண்டுள்ளார்.

    இப்பின்னணியில், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் என தொடர்ச்சியாக விளையாடும் வீரர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்த பிரச்சனைகள் குறித்து 1983ல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முதலாக இந்தியாவிற்காக கோப்பை வென்ற கேப்டன் கபில் தேவ் 2022ல் "சாட் வித் சாம்பியன்ஸ்" (chat with champions) எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அதில் கபில் தேவ் தெரிவித்ததாவது:

    ஐபிஎல் போட்டிகளில் வீரர்களுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்டவும், மேம்படுத்தி கொள்ளவும் வாய்ப்பு இருப்பது உண்மைதான். ஐபிஎல் போட்டியிலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகமாக விளையாடுவதாக வீரர்களுக்கு தோன்றினால் ஐபிஎல்-லில் விளையாடுவதை குறைத்து கொள்ளுங்கள். ஐபிஎல் தேசத்திற்கான விளையாட்டு அல்ல. உங்களுக்கு மனதளவில் களைப்பு உருவானால் ஐபிஎல் தொடரின் போது ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். பணம் சம்பாதிப்பதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் தவறில்லை. க்ளப் கிரிக்கெட் (ஐபிஎல்) வேறு, நாட்டிற்காக விளையாடுவது வேறு. டிப்ரஷன், பிரஷர் என்பவை அமெரிக்க வார்த்தைகள்; அவை எனக்கு புரிவதில்லை. நான் ஒரு விவசாயி. விளையாட்டை மகிழ்ச்சியுடன் அணுகும் போது பிரஷர் ஏற்பட வாய்ப்பே இல்லை.

    இவ்வாறு கபில் கூறினார்.

    3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. #BankStrike #December26 #BankMerger
    ஐதராபாத்:

    தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26-ந் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளான மும்பையை மையமாக கொண்டு இயங்கும் தேனா வங்கி, பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதன்மூலம் உருவாக்கப்படும் புதிய வங்கி குஜராத்தை மையமாக கொண்டு இயங்குவதுடன், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றுக்கு பிறகு 3-வது பெரிய வங்கியாக இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக மேற்படி வங்கிகள் இணைப்புக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

    அதன்படி வருகிற 26-ந்தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் நேற்று அறிவித்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த அமைப்பில் 9 தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வெங்கடாச்சலம், இந்த தகவலை நேற்று வெளியிட்டார். மேற்படி வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசும், அந்த வங்கிகளும் மும்முரமாக ஈடுபட்டு இருப்பதால் இந்த வேலை நிறுத்த முடிவை மேற்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த வேலை நிறுத்தத்தில் வங்கிகளின் 9 தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இதைப்போல மத்திய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து தேசிய தொழிற்சங்க மாநாடு சார்பில் அடுத்த மாதம் (ஜனவரி) 8 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற உள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திலும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கம் பங்கேற்கும் எனவும் அவர் கூறினார்.  #BankStrike #December26 #BankMerger
    ×