என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
மலப்புரத்தில் 2 குழந்தைகளை கொன்று கணவன்-மனைவி தற்கொலை
- குழந்தைகளை கொன்று விட்டு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு குட்டிக்காட்டூர் கரட்டுகுணும்மேல் பகுதியைச் சேர்ந்தவர் சபீஷ் (வயது37). இவரது மனைவி ஷீனா(38). இவர்களுக்கு ஹரிகோவிந்த்(6), ஸ்ரீவர்தன்(2) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சபீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மலப்புரம் முண்டுபரம்பை மைத்ரி நகரில் வடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி ஷீனா கண்ணூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராக பணிபுரிந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு ஷீனாவுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், அது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் சபீசின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அப்போது அங்கு சபீஷ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் வெவ்வேறு அறைகளில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினர். அவர்களது ஒரு குழந்தை ஸ்ரீவர்தன் கட்டில் மீதும், மற்றொரு குழந்தை ஹரிகோவிந்த் தரையிலும் பிணமாக கிடந்தனர்.
இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். குழந்தைகளை கொன்று விட்டு கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் எதற்காக அவர்கள் இந்த முடிவை எடுத்தார்கள்? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்