search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்துபெண் குத்திக் கொலை- நோயாளிகள் அலறல்
    X

    கேரளாவில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்துபெண் குத்திக் கொலை- நோயாளிகள் அலறல்

    • ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.
    • ஆஸ்பத்திரிக்குள் நோயாளியுடன் இருந்த பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில மாதங்களாக ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர்களை தாக்கும் சம்பவம் தொடர்க தையாக நடந்து வருகிறது. இதில் உயிர்ப்பலியும் நிகழ்ந்துள்ளது. இதனால் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த சூழலில் நேற்று மற்றொரு சம்பவமாக தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் மீண்டும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கொச்சி அருகே உள்ள துறைவூர் பகுதியைச் சேர்ந்தவர் லிஜி (வயது 40). இவரது தாயார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் அங்கமாலி அருகே மூக்கனூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் உள்ள வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு துணையாக மகள் லிஜி இருந்தார். அவர் தாயாருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். அவரை பார்த்ததும் லிஜி ஆத்திரம் அடைந்தார்.

    அந்த நபர், லிஜி அருகே வந்ததும் ஏதோ கேட்க இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கை கலப்பு ஏற்படும் வகையில் சண்டை ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்களும், வார்டில் சிகிச்சை பெற்று வந்த மற்றவர்களும் தகராறை விலக்க முயன்றனர். இருப்பினும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தகராறில் ஈடுபட்டவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தார். அதனுடன் அவர் லிஜி மீது பாய்ந்தார்.

    அவரை மற்றவர்கள் தடுக்க முயன்றனர். ஆனாலும் அவர், சரமாரியாக கத்தியால் லிஜியை குத்தினார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாய்ந்தார். அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் லிஜி பரிதாபமாக இறந்தார்.

    ஆஸ்பத்திரிக்குள் நோயாளியுடன் இருந்த பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்தவரை கைது செய்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது அவரது பெயர் மகேஷ் (42) என தெரிய வந்தது. அவர் லிஜியின் முன்னாள் நண்பர் என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஏன் லிஜியை குத்திக் கொன்றார். அவர்களுக்குள் என்ன தகராறு? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×