search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமி பலாத்காரம்- வடமாநில தொழிலாளி கைது
    X

    சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமி பலாத்காரம்- வடமாநில தொழிலாளி கைது

    • 4 வயது மதித்தக்கத்தக்க சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
    • சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலுவாலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அவளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர்.

    அந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து கேரள மக்கள் வெளியே வராத நிலையில், 4 வயது மதித்தக்கத்தக்க சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

    மலப்புரம் மாவட்டம் ஆலுவாவில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. வடமாநிலத்தில் இருந்து புலம்பெயர்ந்து வாழ்ந்த தம்பதியினரின் 4 வயது மகளை, அவர்களது பக்கத்து வீட்டில் வசித்துவந்த மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபர், சாக்லேட் தருவதாக கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    பின்பு சிறுமி அழுத படியே தனது தாயிடம் ஓடியது. அதன்பிறகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை சிறுமியின் தாய் கண்டறிந்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×