என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஆளுநர் ஆர்.என். ரவி ஒவ்வொரு வரியாக படிக்க வேண்டும்: ப.சிதம்பரம்
- ஆளுநருக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
- தமிழக அரசும் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிக்கிறார் என பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த 10-ந்தேதி அன்று நடைபெற்ற விசாரணையின்போது உச்சநீதிமன்றம் ஆளுநர்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தது.
அன்று நடைபெற்ற விசாணையின்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் நேற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நிறைவேற்ற மசோதாக்களை கவர்னர்களின் அதிகாரங்களை கொண்டு முறியடித்துவிட முடியாது. ஜூன் 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் பஞ்சாப் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து முடிவு எடுக்கும்படி நீதிபதிகள் தெரிவித்துள்ளது.
இந்த கருத்தை மேற்கோள்காட்டிய ப.சிதம்பரம், "உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனம் பஞ்சாப் மாநில ஆளுநருக்கு மட்டுமல்ல. அனைத்து ஆளுநர்களுக்கும்தான். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, நீதிபதிகளின் கருத்துக்களை ஒவ்வொரு வரியாக படிக்க வேண்டும். தேவைப்பட்டால் திறமையான வழக்கறிஞரை அழைத்து விளக்கம் பெறலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்