search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மாநிலங்களவை தேர்தல்: 16 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு
    X

    மாநிலங்களவை தேர்தல்: 16 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு

    • ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
    • மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

    புதுடெல்லி :

    மாநிலங்களவையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந்தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    அதன்படி, கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

    தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

    ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×