என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானா மக்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்த வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்
    X

    தெலுங்கானா மக்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்த வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

    • இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானாவை சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, "தெலுங்கானா சகோதர, சகோதரிகள் திரளாக வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தெலுங்கானா சிறந்த கட்டமைப்புக்கு வாக்களியுங்கள். காங்கிரசை வெற்றி பெற செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×