search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பு- அதிகாரிகளுக்கு, மத்திய மந்திரி வலியுறுத்தல்
    X

    அஸ்வினி வைஷ்ணவ் (கோப்பு படம்)

    ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பு- அதிகாரிகளுக்கு, மத்திய மந்திரி வலியுறுத்தல்

    • தொலைத் தொடர்பு சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.
    • எதிர்காலத்துக்கு ஏற்ற தொலைத் தொடர்பு சட்டம் அவசியம்.

    டெல்லியில் நடைபெற்ற தொலைத் தொடர்பு கள அலுவலர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் மாநாட்டில் உரையாற்றிய மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:

    டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பு அவசியம். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, தொலைத் தொடர்புத்துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும்

    நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் பழங்கால தொலைத் தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம். இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×