search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறப்பு டூடுல் வெளியிட்டு 75-வது சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்
    X

    டூடுல் வெளியிட்ட கூகுள்

    சிறப்பு டூடுல் வெளியிட்டு 75-வது சுதந்திர தினத்தை சிறப்பித்த கூகுள்

    • நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • சுதந்திர தினத்தினை முன்னிட்டு கூகுளின் டூடுல் இன்று மாற்றி அமைத்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா விடுதலை அடைந்ததன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு வீடுதோறும் மூவர்ணக் கொடியை மக்கள் ஏற்றி வருகின்றனர். இது 75-வது சுதந்திரம் தினம் என்பதால் இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்தே விடுதலையின் அமுதப் பெருவிழா என்ற பெயரில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

    இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், தனது டூடுல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகின்றது.

    இந்நிலையில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள மிகப்பெரிய உயரங்களைக் குறிக்கும் வகையில் வானத்தில் பறக்கும் பட்டங்களுடன் கூடிய டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் கவுரப்படுத்தி உள்ளது.

    Next Story
    ×