search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த 10 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு
    X

    அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த 10 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு

    • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • மக்களவை தேர்தலுடன் வருகிற 19-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    அத்துடன் 60 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது, 27-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. 28-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்றுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.

    இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி பா.ஜனதா முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் 10 பேரும் ஒருமனதாக எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    என்றபோதிலும் ஜூன் 4-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இட்டாநகர் மற்றும் டெச்சி கசோ தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிராமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

    முக்டோ, சவுக்காம், சகாலீ, தலி, தலிஹா, ரோய்ங், ஜிரோ-ஹபோலி, இட்டாநகர், மொம்திலா, ஹயுலியாங் ஆகிய தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் பா.ஜனதா வேட்பாளர்கள் ஒருமனதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதில் பீமா கண்டு, சவ்னா மெய்ன் ஆகியோர் முறையே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆவார்கள்.

    Next Story
    ×