search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருணாச்சல பிரதேசம்"

    • இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார்.
    • அருணாச்சல பிரதேசம் திபெத்தின் தெற்குப் பகுதி என சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

    இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் எங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வருகிறது. இந்திய தலைவர்கள் அருணாச்சால பிரதேசம் சென்றால் சீனா எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

    சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசம் சென்றிருந்தார். அதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு இந்தியாவால் அருணாச்ச பிரதேசம் என அழைக்குப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். ஜிஜாங்கின் (திபெத்தை சீனா இவ்வாறு அழைக்கிறது. திபெத்தின் தெற்குப்பகுதான் அருணாச்சால பிரதேசம் என சீனா கூறி வருகிறது) தெற்குப் பகுதி சீனாவின் உள்ளார்ந்த பகுதியாகும்" என சீன பாதுகாப்பு அமைச்கத்தின் செய்தி தொடர்பானர் ஜாங் ஜியாவோகாங் தெரிவித்திருந்தார்.

    சீனா இவ்வாறு உரிமைகோரிய நிலையில், அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தி செய்தி தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் கூறுகையில் "அருணாச்சல பிரதேசத்தை இந்திய நிலப்பரப்பாக அங்கீகரிக்கிறோம்.

    ஊடுருவல் அல்லது அபகரித்தல், ராணுவம் மூலமாக உண்மையான எல்லைக்கோட்டை தாண்டி தங்களது நிலப்பரப்பு என ஒருதலைப்பட்சமாக உரிமைக்கோருவதற்கான எந்தவொரு முயற்சியையும் அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது" என்றார்.

    • மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது.
    • ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியாவில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என நேற்று தலைமை தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார் அறிவித்தார்.

    அதன்படி, வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1-ம் தேதி முடிவடைகிறது.

    மேலும், மக்களவை தேர்தலோடு சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால், அம்மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

    மக்களவை, சட்டமன்ற மற்றும் இடைத்தேர்லுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிமில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சட்டப்பேரவைக்கு ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மக்களவை தேர்தலுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    • அருணாச்சல பிரதேசம் எல்லை குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் இருந்து வருகிறது
    • அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து சீனா தங்கள் பகுதி என கூறி வருகிறது
    ×