என் மலர்
இந்தியா
- வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
- உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தீபக்(வயது35). கோழிக்கோட்டில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்த இவர், கடந்த 9-ந்தேதி கண்ணூருக்கு ஒரு பஸ்சில் சென்றார்.
அப்போது அவர் அந்த பஸ்சில் பயணம் செய்த ஒரு இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்தாக கூறப்படுகிறது. ஓடும் பஸ்சில் தனக்கு நேர்ந்த அந்த நிகழ்வு தொடர்பான வீடியோவை, அந்த இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதனை லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
இதனால் அவமானம் தாங்காமல் வாலிபர் தீபக் தற்கொலை செய்து கொண்டார். இளம் பெண் வெளியிட்ட வீடியோ காரணமாக தீபக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடும் விவாதத்தை உருவாக்கியது.
தீபக்கின் சாவுக்கு காரணமான இளம்பெண்ணின் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.
இன்ஸ்டாகிராமில் தனது வீடியோ வைரல் ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் தனது மகன் மீது அபாண்டமாப பழி சுமத்தி தற்கொலைக்கு தூண்டிவிட்டதாக தீபக்கின் தாய் கன்யகா குற்றம்சாட்டினார்.
அவர் சம்பந்தப்பட்ட இளம்பெண் மீது நடவடிக்கை கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். அதன்பேரில் சமூகவலை தளத்தில் வீடியோ பதிவிட்ட இளம்பெண்ணின் மீது தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிந்தனர்.
தனது வீடியோ பதிவு மற்றும் தன்னுடைய செயல்பாட்டுக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியதால், வீடியோவை வெளியிட்ட இளம்பெண் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் கேரளாவில் சில ஆண்கள், தங்களின் உடலை அட்டைப்பெட்டியால் மறைத்தபடி பஸ்களில் பயணம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுகிறது. அதில் ஒரு வீடியோவில் பயணி ஒருவர் கூண்டு போன்று இருக்கும் அட்டை பெட்டிக்குள் நின்ற படி பஸ்சில் பயணிப்பது போன்று இருக்கறது.
மற்றொரு வீடியோவில் பஸ் கண்டக்டர் ஒருவர், தனது உடலில் நெஞ்சு மற்றும் கைகள் உள்ளிட்ட இடங்களில் அட்டை பெட்டிகளை கட்டிக்கொண்டு வந்து பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கிறார். அவர் உடலில் இருநத அட்டையில் ஆண்கள் ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற வாசகத்தையும் எழுதியிருந்தார்.
ஆண்களின் இந்த வித்தியாசமான நடவடிக்கையை, அந்த பஸ்களில் பயணித்த மற்ற பயணிகளின் கவனத்தை ஈர்த்தது. அதே நேரத்தில் அட்டை பெட்டியால் உடலை மறைத்து பஸ்சில் ஆண்கள் பயணிக்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
- இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது
அசாமில் இரு சமூகத்தினரிடையே அவ்வப்போது வன்முறைகள் வெடிப்பதுண்டு. அந்த வகையில் தற்போது வெடித்த வன்முறை ஒன்றில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் தொடர்ந்து இரண்டாவது நாளாக ராணுவத்தினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திங்கள்கிழமை இரவு அன்று கோக்ரஜார் நகரத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ள கரிகான் என்னுமிடத்தில் போடோ சமூகத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஸ்கார்பியோ வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது எதிரே வந்த இரு இளைஞர்கள்மீது வாகனம் மோதியுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்படுள்ளது.
இதனைத்தொடர்ந்து வாகனம் மோதிய இளைஞர்களின் சமூகமாக ஆதிவாசியினர் ஒன்றுதிரண்டு அந்த மூன்று இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் ஒரு இளைஞர் உயிரிழந்தார். தொடர்ந்து வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்ட மற்ற நான்கு இளைஞர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சையில் அனுமதிப்பட்டுள்ளனர். இதில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இரு உயிரிழப்புகளை தொடர்ந்து இரு சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டக்காரர்கள் சிலர் வீடுகளுக்கும், ஒரு அலுவலகக் கட்டிடத்திற்கும், அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்த ஆதிவாசி கிளர்ச்சிக் குழுவின் ஒரு முகாமிற்கும் தீ வைத்தனர். மேலும் கரிகான் காவல் புறக்காவல் நிலையத்தையும் தாக்கினர்.
வன்முறை வெடிக்க போலீஸ், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இராணுவத்தின் நான்கு குழுக்களுடன் , விரைவு அதிரடிப்படை, மத்திய அரசுக் காவல் படை மற்றும் அசாம் மாநில காவல்துறை பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ராணுவம் இன்று இரண்டாவது நாளாக அங்கு கொடி அணிவகுப்பை நடத்தியது.
இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் நான்கு முதல் ஐந்து நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற அச்ச உணர்வு காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பி அகிலேஷ் குமார் சிங், நிவாரண முகாம்களில் தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"நாங்கள் சில நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இன்று அனைவருடனும் ஒரு கூட்டத்தை நடத்துவோம்," என்று அவர் கூறினார். நிலைமை ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மக்கள் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். வதந்திகளை பரப்புவோர் இத்தகைய செயல்களை நிறுத்தவில்லை என்றால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
நிலைமை சீராக கட்டுக்குள் வந்தாலும் நேற்றுமுதல் கோக்ரஜார் மாவட்டத்தில் BNSS பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவுகள் அமலில் உள்ளன. அதே சமயம், கோக்ரஜார் மற்றும் அதனை ஒட்டியுள்ள சிரங் மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
- உள்ளாடைகளை திருடிய வாலிபர் கேரளாவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
- இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி பெங்களூருக்கு வந்து உள்ளார்.
பெங்களூர்:
பெங்களூரு வித்யாநகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்களின் உள்ளாடைகளை காயவைத்து இருந்தனர். அப்போது பகல் நேரத்தில் அந்த பகுதியில் சுற்றிதிரிந்த வாலிபர் ஒருவர் திடீரென அந்த உள்ளாடைகளை மட்டும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஹெப்பகோடி போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.
உள்ளாடைகளை திருடிய வாலிபர் கேரளாவை சேர்ந்த அமல்என்ஜி (23) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைதேடி பெங்களூருக்கு வந்து உள்ளார். பின்னர் ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரது அறையில் தங்கி இருந்து வேலை தேடிவந்தார். அப்போது பகலில் சுற்றிதிரியும் அவர் வீட்டின் வெளியில் காயப்போடப்பட்டு இருக்கும் பெண்களின் உள்ளாடைகளை திருடிசென்றது தெரியவந்தது. மேலும் அவரது செல்போனை வாங்கி பார்த்த போது திருடிசென்ற பெண்களின் உள்ளாடைகளை அணிந்து செல்பி மற்றும் வீடியோ எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அமல்என்ஜியை அவரது அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் பெண்களின் 20 ஜோடி உள்ளாடைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.
- மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை
மத்திய அரசு ஊழியர் மீது மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக, சிபிஐ-இடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாநில புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, சிபிஐ-யின் அனுமதி இல்லை என்ற காரணத்திற்காகச் செல்லாது என்று அறிவிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (PC Act) 17-வது பிரிவின்படி, அந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை ஒரு மாநில ஏஜென்சி, மத்திய ஏஜென்சி அல்லது எந்தவொரு காவல்துறை ஏஜென்சியும் விசாரிக்க முடியும்; ஆனால், விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒரு குறிப்பிட்ட தரவரிசையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான லஞ்சம், ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை" என்று தெரிவித்தனர்.
நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே, மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ-இடமும், மாநில அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையில்லா குற்றங்கள் என்பதால், மாநில காவல்துறையும் அவற்றை விசாரிக்க முடியும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தபோது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அரசு ஊழியராக இருந்தபோதிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 'சிபிஐ மட்டுமே இந்த வழக்கை அல்லது விசாரணையைத் தொடங்கியிருக்க முடியும் என்று கூறுவது தவறானது' என உயர் நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
- குஜராத்தில் அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுதான் முதல் முறை.
- வெறித்தன போதை பார்ட்டிகள் உள்ளிட்ட பல ரகசிய தேவைகளுக்கு இந்த விஷம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் சிறப்பு போலீஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் சிறிய டப்பாவில் பாம்பு விஷம் இருந்தது தெரிய வந்தது. அது கொடிய பாம்பு விஷம் என்றும், ரகசிய சந்தையில் பல கோடிக்கு விற்பனை ஆவதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 6.5 மில்லி லிட்டர் பாம்பு விஷம் கைப்பற்றப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ 5.85 கோடி என்று தெரிய வந்தது.
பாம்பு விஷத்தை விற்க வந்தவரின் பெயர் சோனி என்றும், அவர் கூடுதல் தொகைக்கு அதை விற்க இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருடன் ரகசிய வர்த்தகத்தில் ஈடுபடும் கும்பலையும் பிடிக்க போலீசார் திட்டமிட்டனர், அதன்படி அவரை வாடிக்கையாளரிடம் பேச வைத்து பாம்பு விஷத்தை வாங்குபவர்களுக்கு வலைவிரித்தனர். அப்போது பாம்பு விஷத்தை ரூ.8 கோடிக்கு வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து சிலர் வந்தனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் பாம்பு விஷம் வாங்க வந்த மேலும் ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் மத்திய பிரதேசத்தின் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் சூரத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
குஜராத்தில் அதிக மதிப்புள்ள பாம்பு விஷம் பிடிபடுவது இதுதான் முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர். கொடிய பாம்பு விஷமானது விஷமுறிவு மருந்து தயாரிப்பு மற்றும் வெறித்தன போதை பார்ட்டிகள் உள்ளிட்ட பல ரகசிய தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
- புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
- மதுபானங்களின் வீரியத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் மதுபானம் மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் மக்கள் எளிதில் வாங்கும் அளவுக்கு விலை குறைவாக கிடைப்பது பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது
அதன் அறிக்கையில், "தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், மது மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான வரி விதிப்பு முறை மிகவும் பலவீனமாக உள்ளது.
வருமானம் உயர்ந்து வரும் சூழலில், இந்தத் தயாரிப்புகளின் விலை அதற்கேற்ப உயர்த்தப்படவில்லை.
புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது.
வரி குறைவாக இருப்பதால், மக்கள் இவற்றை எளிதாக வாங்கிப் பயன்படுத்துவது நோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபானங்களின் வீரியத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவில் அத்தகைய முறை பின்பற்றப்படாததால், அதிக போதையுள்ள மதுபானங்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
மேலும் குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை கலந்த பழச்சாறுகள் மீதான வரி நுகர்வைக் குறைக்கும் அளவுக்குப் போதுமானதாக இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
- ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள சர்சாவா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கௌஷிக் விஹார் காலனியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று காலை அந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அண்டை வீட்டார் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, நில அளவையாளராக பணியாற்றி வந்த அசோக் ரதி (40), அவரது மனைவி அஜந்தா (37), தாய் வித்யாவதி (70) மற்றும் மகன்கள் கார்த்திக் (16), தேவ் (13) ஆகிய ஐந்து பேரும் ஒரே அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
ஐந்து பேரின் தலைகளிலும் மிக நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலிருந்து மூன்று கைத்துப்பாக்கிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்த ஆபாச வீடியோக்கள் வெளியாகின.
- யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.
கர்நாடக மாநில குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்து வருபவர் ராமசந்திர ராவ் (வயது 59). இவரது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த வழக்கில் சிறையில் உள்ளார்.
தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த விவகாரத்தில் ராமசந்திர ராவும் சிக்கி இருந்தார். கடந்த ஆண்டு ராமசந்திர ராவை கட்டாய விடுப்பில் அரசு அனுப்பி வைத்திருந்தது. மாத கணக்கில் அவருக்கு பொறுப்பு வழங்காமல் அரசு இருந்தது.
அதன்பிறகு தான் குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி.யாக ராமசந்திர ராவ் நியமிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், ராமசந்திர ராவ் தனது அலுவலகத்திலேயே சீருடை அணிந்த நிலையில் பெண்களை கட்டியணைத்து முத்தமழை பொழிந்ததுடன் உடல்களை தொட்டு லீலையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமசந்திர ராவ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் 3 வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில், 2 வீடியோக்களில் அவர் சீருடை அணிந்து கொண்டு இருக்கிறார். மற்றொரு வீடியோவில் மட்டும் சாதாரண உடையை அவர் அணிந்திருக்கிறார்.
அது போலி வீடியோக்கள் என்றும் யாரோ சதி செய்து வீடியோக்களை வெளியிட்டுள்ளனர் என்றும் ராமசந்திர ராவ் தெரிவித்தார்.
இந்த வீடியோக்கள் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கர்நாடக மாநில போலீஸ் டிஜிபி பதவியில் இருந்து ராமசந்திர ராவ் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கணவன்- மனைவி இடையிலான தகராறு கைகலப்பாக மாறியது.
- மனைவி மீது எறிந்த கல், மகனின் தலையை பலமாக தாக்கியது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஆனந்தபூரில் கணவன்- மனைவி சண்டையில் பரிதாபமாக 4 வயது குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆனந்தபூரில் உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி மகேஷ்வரி. இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு அடிதடியாக மாறியது.
மனைவி மீது கடுங்கோபம் கொண்ட ரமேஷ், கல்லை எடுத்து மனைவியை நோக்கி எறிந்துள்ளார். ஆனால், கல் குறி தவறி அவரது 4 வயது மகனின் தலையை பலமாக தாக்கியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
கணவன்- மனைவி சண்டையால் 4 வயது குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- 1977-ல் அடையாளம் தெரியாத நபர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் அவர்களை தேடியும் கிடைக்கவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 ரூபாய் 65 பைசாவை வழிப்பறி செய்ததாக 50 வருடத்துக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை மசாகோன் நீதிமன்ற நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. புகார்தாரர் உயிரோடு இருந்தால் அரசு தரப்பில் ரூ.7.65-ஐ வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
1977-ல், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் 7 ரூபாய் 65 பைசாவை பறித்துச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தேடியும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் நீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்ட வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.
- அவருடைய போட்காஸ்ட்-ஐ கேட்டீர்களா?. அவரோட பாடி லாங்குவேஜ் என்ன?
- அவர் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்?
தெரு நாய்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வு முன் என்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிமன்றம் விலங்குகள் ஆர்வலர் மட்டும் முன்னாள் மத்திய அமைச்சர் காந்தியை கடுமையாக கண்டித்தது.
மேனாகா காந்தி கருத்து குறித்து நீதிபதிகள் கூறுகையில் "நீங்கள் (மேனகா காந்திக்காக வாதாடிய வழக்கறிஞர்) நீதிமன்றத்தில், நாங்கள் எச்சரிக்கையுடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கிறீர்கள். அதே நேரத்தில் உங்களுடைய கட்சிக்காரர் எந்த மாதிரியான கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார் என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா?. ஆனால் அவர் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் பெருந்தன்மையுடன் உள்ளோம்.
அவருடைய போட்காஸ்ட்-ஐ கேட்டீர்களா?. அவரோட பாடி லாங்குவேஜ் என்ன? அவர் என்ன சொன்னார்? எப்படி சொன்னார்? எச்சரிக்கையுடன் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, உங்கள் கட்சிக்காரர் யார் மீதும், எதன் மீதும் தனக்குப் பிடித்தமான எல்லாவிதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்" என்றனர்.
- சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.
- இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் இன்று பதவியேற்றுக் கொண்டார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய நிதின் நபின், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனக்கூறினார்.
மேலும் திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர்,
சமீபத்தில், எதிர்க்கட்சிகளால் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கவும், நீதிபதியை பதவி நீக்கம் செய்யவும் எப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.
நமது பாரம்பரியங்களைத் தடுக்கவும், ராமர் சேதுவின் இருப்பை மறுக்கவும், கார்த்திகை தீபத்தை எதிர்க்கவும் முயலும் இத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.






