என் மலர்
இந்தியா
- தேஜ் பிரதாப் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார்.
- பீகார் தேர்தலில் தேஜ் பிரதாப் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனர் லல்லு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவர் தேஜ்பிரதாப் யாதவ். இவர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அவர் ஜனசக்தி ஜனதாதளம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் தேர்தலில் அவர் மகுவா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதற்கிடையே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தேஜ்பிரதாப் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.
பீகார் தேர்தல் பிரசாரம் இன்று முடிவடையும் நிலையில் அவருக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேஜ்பிரதாப் யாதவின் சகோதரரான தேஜஸ்வி யாதவ் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் ஆவார்.
- முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள்
- இரண்டாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமைப்படுவதில்லை
இந்தியா ஒரு இந்து நாடு என்றும், நாட்டில் உள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்து மூதாதையர்களின் சந்ததியினர் என்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் மோகன் பகவத் இதனை தெரிவித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய மோகன் பகவத், "பண்டைய காலத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டவர்கள் இந்த மண்ணில் வாழும் மக்களைக் குறிக்க இந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர்.
இந்து சமூகத்தை நான்கு குழுக்களாக வகைப்படுத்தபட்டுள்ளது. முதலாவது பிரிவினர் இந்துவாக இருப்பதில் பெருமை கொள்பவர்கள். இரண்டாவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் அதில் பெருமைப்படுவதில்லை. மூன்றாவது பிரிவினர் தங்களை தனிப்பட்ட முறையில் இந்துக்கள் என்று கருதுபவர்கள், ஆனால் வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாதவர்கள். நான்காவது பிரிவினர் தாங்கள் இந்துக்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.
இந்தியா ஒரு இந்து நாடு. இங்குள்ள முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஒரே மூதாதையர்களின் சந்ததியினர். இந்து சமூகம் ஒன்றுபட்ட சக்தியாக ஒன்றுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
- இந்திய சமூகத்தில் சாதி தொடர்ந்து வலுவான சமூக செல்வாக்கை செலுத்தி வருகிறது.
- சாதி மறுப்புத் திருமணங்கள் சாதிய ரீதியிலான பாகுபாட்டை பலவீனப்படுத்துகிறது.
வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது அரசமைப்புச் சட்டப்படி தனிநபர் உரிமை என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது
11 வருடங்களாக காதலித்து வந்த வெவ்வேறு சாதியை சேர்ந்த இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "வெவ்வேறு சாதியை சேர்ந்த நாங்கள் இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் இதற்கு எங்களது குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. அவர்களிடம் இருந்து அச்சுறுத்தல்களை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஆகவே டெல்லி போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரும் போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கின் விசாரணையில் பேசிய நீதிபதி சஞ்சீவ் நருலா, "இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 இன் படி வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமையாகும். திருமண வயது வந்தவர்களின் தேர்வை அவர்களின் குடும்பமோ, சமூகமோ தடுக்க முடியாது. இந்திய சமூகத்தில் சாதி தொடர்ந்து வலுவான சமூக செல்வாக்கை செலுத்தி வருகிறது. சாதி மறுப்புத் திருமணங்கள் சாதிய ரீதியிலான பாகுபாட்டை பலவீனப்படுத்துவதன் வழி சமூக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.
- குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
- இருவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடு தப்பி சென்ற ரவுடி கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியானாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. குருகிராமில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலையில் அவரை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையே வெங்கடேஷ் கார்க் ஜார்ஜியாவுக்கு தப்பி சென்றார். இந்த நிலையில் அரியானா போலீசார் அதிகாரிகள் உள்பட பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் ஜார்ஜியாவில் பதுங்கியிருந்த வெங்கடேஷ் கார்க்கை கைது செய்தனர்.
அதேபோல் பானு ராணா என்பவரை அமெரிக்காவில் கைது செய்துள்ளார். இவர் பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையவர். இருவரும் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
- ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
- தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ஜூப்ளி ஹில்ஸ், பாரத ராஷ்டிரிய சமிதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் உடல்நல குறைவு காரணமாக இறந்தார். ஜூப்ளி ஹில்ஸ் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 14-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி,பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி சார்பில் கே.டி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகின்றனர்.
பிரசாரத்தின் போது வரம்புகளை மீறி ஒவ்வொருவரும் விமர்சனம் செய்து பேசி வருவதால் ஜூப்லி ஹில்ஸ் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
- 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும்.
- விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவில், பரப்பன அக்ரஹாரா சிறை உள்ளது. இங்கு 5,500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் உள்ளனர்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் சொகுசு வசதி பெற்றதுடன், செல்போனில் பேசியது, நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்த படியே டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகளுக்கு மீண்டும் சொகுசு வசதிகள் செய்து கொடுத்தது தொடர்பான வீடியோ நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-
பரப்பன அக்ரஹாரா சிறையில் கற்பழிப்பு வழக்கு குற்றவாளியான உமேஷ் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 20 கற்பழிப்பு வழக்குகள் உள்ளன. அவற்றில் 18 வழக்குகளில் பெண்களை கற்பழித்து உமேஷ் ரெட்டி கொலை செய்ததும் அடங்கும். இந்த வழக்குகளில் சிறைவாசம் அனுபவித்து வரும் உமேஷ் ரெட்டி செல்போனில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சிறைக்குள் செல்போனில் பேசியபடி அங்கும், இங்கும் சுற்றி திரிகிறார்.
அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் டி.வி. இருப்பதும் தெரியவந்துள்ளது. உமேஷ் ரெட்டி 2 விதமான செல்போன்களில் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அவர் 2 செல்போன்களை பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. உமேஷ் ரெட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவின் காதலன் தருணும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரும் செல்போனில் பேசியபடி சிறையில் சுற்றி திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அதில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ள தருண் யாருடனோ மிகவும் தீவிரமாக செல்போனில் பேசுவது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதியான ஜூகாத் கமீத் ஷகீலும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூகாத் செல்போனில் பேசியபடி சிறைக்குள் சுற்றி வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பா.ஜ.க. தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இதுபற்றி நேற்று காலையில் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
ஆனால் அந்த வீடியோவை தான் பார்க்கவில்லை என்றும், அதுபற்றி அதிகாரிகளிடம் தகவல் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்தார். அதே நேரத்தில் போலீஸ் மந்திரி பரமேஸ்வர் இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் சென்று விட்டார்.
இந்த நிலையில், கர்நாடக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த், மேற்கண்ட வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தும்படி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறையை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கு செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அப்படி இருந்தும் கைதிகள் எப்படி செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றும், ஜாமரால் தங்களுக்கு தான் பாதிப்பு ஏற்படுவதாகவும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல முறை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களில் பேசுவது எப்படி என்பது தெரியவில்லை? என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
- குழந்தைகளுக்கு ஒரு மரியாதைக்கு தட்டு கூட கிடைக்கவில்லை.
- 20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவை காகிதத்தில் வைத்து வழங்கிய வீடியோவை பார்த்து இதயம் நொறுங்கி போனதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நான் இன்று மத்தியப் பிரதேசம் செல்கிறேன். மேலும், அங்குள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறப்படுகிறது என்ற செய்தியை செய்தித்தாள்களில் பார்த்ததிலிருந்து, என் இதயம் உடைந்து போயுள்ளது.
நாட்டின் எதிர்காலம் தங்கள் கனவுகளில் தங்கியிருக்கும் அதே அப்பாவி குழந்தைகள் இவர்கள்தான், அவர்களுக்கு ஒரு மரியாதைத் தட்டு கூட கிடைக்காது.
20 ஆண்டுகளுக்கும் மேலான பாஜக அரசால் குழந்தைகளின் தட்டுகளை கூட திருடப்பட்டுள்ளன. அவர்களின் 'வளர்ச்சி' வெறும் மாயை, ஆட்சிக்கு வருவதற்கான உண்மையான ரகசியம் 'முறைமை'.
நாட்டின் குழந்தைகளை, இந்தியாவின் எதிர்காலத்தை, இவ்வளவு மோசமான நிலையில் வளர்க்கும் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு அவமானம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.
- டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தனியார் தகவல் தொலைதொடர்பு நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல், வி.ஐ. உள்ளன. இந்தநிலையில் அடுத்த மாதமான டிசம்பாில் அனைத்து தனியார் நிறுவனங்களும் தங்களுடைய செல்போன் சேவைக்கான ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் விலை உயர்த்தப்பட்டிருந்தநிலையில் 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அடிப்படை ரீசார்ஜ் பிளான்களுக்கு 10 சதவீதமாகவும், மற்ற பிளான்களுக்கு 20 சதவீதமாகவும் கட்டண உயர்வு இருக்கலாம்.

மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த காரணம்: 5G சேவைகளுக்கான பராமரிப்பு செலவுகள் அதிகரித்துள்ளதால், நிறுவனங்கள் தங்கள் வருவாயை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அமல்படுத்தப்படும் தேதி: டிசம்பர் மாதத்தில் கட்டண உயர்வு அமலுக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வாடிக்கையாளர்கள் கட்டண உயர்வு குறித்து கவலை தெரிவித்த நிலையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு சுமையாக இருக்கும்.
- குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
- நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யு.பி.ஐ. என்கிற (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது. நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன.
மேலும் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையாக யு.பி.ஐ. உள்ளது. இந்தநிலையில் கண் பாா்வையற்ற மற்றும் கல்வியறிவில் குறைந்த வாடிக்கையாளர்களுக்காக குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இதற்காக நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
- பீகார் தேர்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பீகார் சட்டசபை பதவிக்காலம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, 6-ந் தேதியும், 11-ந் தேதியும் இருகட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பா.ஜ.க.-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முன்னாள் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, அசாதுதின் ஒவைசி எம்.பி.யின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில் 18 மாவட்டங்களில் அடங்கிய 121 தொகுதிகளில் 6-ந்தேதி முதல்கட்ட தேர்தல் நடந்தது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 64.66 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி வினோத்சிங் குஞ்சியால் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், 2ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை மறுநாள் (11ம் தேதி) நடைபெறுகிறது.
இதனால், கட்சி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் வாக்கு சேகரித்தனர்.
பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்பட பலர் பீகாரில் முற்றுகையிட்டு பிரசாரம் செய்தனர்.
மீதிமுள்ள தொகுதிகளில் நாளை மறுநாள் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
- விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
- தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
தசரா விடுமுறையின் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகளை முடிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெறாத காரணத்தால், கடந்த மாதம் (அக்டோபர்) 7-ந் தேதியில் இருந்து 18-ந் தேதி வரை பள்ளிக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டு இருந்தது.
அந்த விடுமுறை நாட்களில் ஆசிரியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில், தொடர் விடுமுறையால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு குறித்த நேரத்தில் வகுப்புகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று முதல் வருகிற ஜனவரி மாதம் 24-ந் தேதி வரை தினமும் ஒரு வகுப்பு கூடுதலாக நடத்தும்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி மாதம் 24-ந் தேதிக்குள் தினமும் கூடுதலாக ஒரு வகுப்புகளை நடத்தி பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
- பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்ட நீர்மின் நிலையத்தை தொடங்கி வைக்கிறார்
- பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
புதுடெல்லி:
அண்டை நாடான பூடான், இந்தியாவுடன் சிறந்த நட்புறவை பேணி வருகிறது. இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அந்த நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதில் முக்கியமாக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் வாங்சுக்குடன் சேர்ந்து இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்கிறார். மேலும் பிரதமர் ஷெரிங் தோப்கேவையும் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளார்.
இதைப்போல பூடானின் முன்னாள் மன்னர் ஜிக்மே வாங்சுக்கின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது, பூடானில் இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள 1020 மெகாவாட் நீர் மின் நிலையத்தை அந்த நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைக்கிறார்.
பிரதமரின் பயணம் இரு தரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.






