என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகத்தில் ஊழல்வாதிகளின் அரசு உள்ளது: குமாரசாமி
Byமாலை மலர்10 May 2022 3:44 AM GMT (Updated: 10 May 2022 3:44 AM GMT)
பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தனர். அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற வாக்குக்கு ஏற்ப தான் இந்த அரசு நடக்கிறது என்று குமாரசாமி கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பாகல்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு எப்படி வந்தது?. பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தனர். இது ஊழல்வாதிகளின் அரசு. அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற வாக்குக்கு ஏற்ப தான் இந்த அரசு நடக்கிறது.
இங்கு கஜானாவை கொள்ளையடித்து டெல்லிக்கு பணம் அனுப்புகிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கேட்கிறார். நான் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஊழல்கள் குறித்து டன் கணக்கில் ஆவணங்களை வெளியிட்டேன். அந்த ஆவணங்களை வைத்து சிலர் பணம் சம்பாதித்தனர். அதனால் ஆவணங்களை வெளியிட்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பாகல்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., முதல்-மந்திரி பதவிக்கு ரூ.2,500 கோடிக்கு பேரம் பேசப்பட்டதாக கூறியுள்ளார். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு எப்படி வந்தது?. பணம் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தனர். இது ஊழல்வாதிகளின் அரசு. அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற வாக்குக்கு ஏற்ப தான் இந்த அரசு நடக்கிறது.
இங்கு கஜானாவை கொள்ளையடித்து டெல்லிக்கு பணம் அனுப்புகிறார்கள். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கேட்கிறார். நான் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஊழல்கள் குறித்து டன் கணக்கில் ஆவணங்களை வெளியிட்டேன். அந்த ஆவணங்களை வைத்து சிலர் பணம் சம்பாதித்தனர். அதனால் ஆவணங்களை வெளியிட்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X