என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மும்பை ஐஐடி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Byமாலை மலர்17 Jan 2022 5:35 AM GMT (Updated: 17 Jan 2022 5:35 AM GMT)
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மும்பை:
இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான மும்பை ஐஐடியில், 26 வயது முதுகலை படிப்பு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐடியில் உள்ள மாணவர் விடுதியின் 7-வது தளத்தில் இருந்து அந்த மாணவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து அவர் தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் மாணவர் கூறுகையில், ‘நான் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். என் தற்கொலைக்கு யாரும் பொறுப்பு கிடையாது’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 122 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐஐடியில், பாத்திமா என்ற மாணவி தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X