search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா வீட்டுத்தனிமை- மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஒமைக்ரான் வைரசால் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி விட்டது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது.

    கொரோனாவால் வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் 7-வது நாளில் மறுபரிசோதனையின்றி தனிமை காலத்தை முடித்துக் கொள்ளலாம் என்பது உள்பட பல்வேறு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×