என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்: பாதிப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Byமாலை மலர்5 Dec 2021 6:34 AM GMT (Updated: 5 Dec 2021 6:34 AM GMT)
டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தன்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "டெல்லியில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தான்சானியாவில் இருந்து திரும்பியவர். கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் " என்றார்.
இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக விலகாத நிலையில், உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 40 நாடுகளில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவி உள்ளது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த பயணி மற்றும் பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆகிய 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி ஆனது. இதேபோல் குஜராத் மாநிலம் ஜாம்நகரி ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் இருந்து மகாராஷ்டிரா திரும்பிய 33 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் நேற்று வரை ஒமைக்ரான் பாதிப்பு 4 ஆக இருந்தது.
இதுகுறித்து, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், "டெல்லியில் முதல் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி தான்சானியாவில் இருந்து திரும்பியவர். கொரோனா தொற்றால் இதுவரை 17 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் " என்றார்.
இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 5 பேரில் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X