என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒமிக்ரான் வைரஸால் அச்சம்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு பரிசோதனை
Byமாலை மலர்30 Nov 2021 7:09 AM GMT (Updated: 30 Nov 2021 8:53 AM GMT)
புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டேஹ்ராடூன்:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது பிறகு ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது.
இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் இருக்கும் என்பதால், கொரோனாவைவிட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில அரசு கூறுகையில், " தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 6 பேருக்கும், பிற நாடுகளில் இருந்து வந்த 8 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 14 பேரும் டேஹ்ராடூனைச் சேர்ந்தவர்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்" என்று மாநில அரசு கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்.. ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இது பிறகு ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் அடைந்து பரவியது.
இந்த நிலையில் இப்போது புதிதாக உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிக வீரியத்துடன் இருக்கும் என்பதால், கொரோனாவைவிட கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
இதனால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா உள்பட வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில அரசு கூறுகையில், " தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 6 பேருக்கும், பிற நாடுகளில் இருந்து வந்த 8 பேருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 14 பேரும் டேஹ்ராடூனைச் சேர்ந்தவர்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்" என்று மாநில அரசு கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்.. ஒமிக்ரான் வைரஸ் இதுவரை 17 நாடுகளில் பரவி உள்ளன
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X