search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒமிக்ரான் வைரஸ்"

    ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்  முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள இந்த வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக கால் பதித்து வருகிறது.  ஒமிக்ரான் பரவலால் தென் ஆப்பிரிக்காவில் வேகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், ஒமிக்ரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய  இந்தியா தயாராக உள்ளது என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், 

    ஒமிக்ரான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட  ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவி செய்ய இந்திய அரசு தயாராக உள்ளது. அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், சோதனைக் கருவிகள், கையுறைகள், பிபிஇ கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற மருத்துவ உபகரணங்களைத் தேவைப்படும்போது வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது. 

    மேலும் மரபணு கண்காணிப்பு மற்றும் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளில் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளுடன் இந்திய நிறுவனங்கள் பணியாற்றுவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஜப்பான் நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    டோக்கியோ:

    உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது. இதையடுத்து பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. இதே போல் ஜப்பான் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் வராமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தென்ஆப்பிரிக்கா உள்பட 8 நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை முதல் ஜப்பானுக்குள் நுழைய வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என பிரதமர் புமியே கிஷிடா தெரிவித்துள்ளார்.
    கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.
    சென்னை:

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ மிக வேகமாக வெளிநாடுகளில் பரவி வருகிறது.

    இந்த புதிய வைரஸ் இந்தியாவுக்குள் பரவி விடாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    இதுகுறித்து தமிழக அரசுக்கும், மத்திய அரசு கடிதம் எழுதி உஷார்படுத்தி உள்ளது.

    இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து ‘ஒமிக்ரான்’ வகை கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், விமான நிலைய இயக்குனர்கள் சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    முக கவசம்

    இதுபற்றி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    கொரோனா தற்போது கட்டுக்குள் வந்து விட்டதாக பலரும் அலட்சியமாக முக கவசம் அணியாமல் செல்வதை பார்க்க முடிகிறது. இது மிகப்பெரிய தவறாகும். எந்த ஒரு வைரசும் நம்மை தாக்காமல் இருக்க வேண்டுமானால் முக கவசம்தான் பாதுகாக்கும். எனவே கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

    தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதியதாக உருமாறி வந்துள்ள ஒமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக பரவி விட்டது. இன்னும் இந்தியாவிற்குள் நுழையவில்லை.

    ஆனாலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனென்றால் அது போன்ற வீரியமிக்க வைரஸ் பரவினால் அதன் எதிர்விளைவுகள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். அதிக உயிரிழப்பு கூட உருவாக்கி விடும்.

    இதை கருத்தில் கொண்டு கொரோனா காலத்தில் நாம் மேற்கொண்ட அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதும் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

    இப்போதுள்ள சூழலில் கொரோனாவுக்குதான் தடுப்பூசி உள்ளது. இதில் 2 தவணை தடுப்பூசி போடாதவர்கள் இன்னும் பலர் உள்ளனர். அவர்களையும் கண்டறிந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஒரு தவணை தடுப்பூசி போடாதவர்களும் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

    முன் எச்சரிக்கையாக வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை நடத்தப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்கா, ஐரோப்பா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ் வானா, மொரிசீயஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்று இல்லாவிட்டாலும் சொல்லும் அறிவுரை என்னவென்றால், அரசு சொல்லும் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுங்கள். கண்டிப்பாக முககவசம் அணிந்து சொல்லுங்கள், தனி நபர் இடைவெளி, தனி நபர் சுகாதாரம் ஆகியவற்றை மிகச்சரியாக கடைபிடியுங்கள். இதுதான் முக்கியம்.

    தற்போது மழை காலமாக இருப்பதால் காய்ச்சிய தண்ணீரை அனைவரும் குடிக்க வேண்டும். வயிற்றுபோக்கு போன்ற உடல் உபாதைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் வைரஸ் சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    உலகளவில் கொரோனா தொற்று பல்வேறு உருமாற்றங்களை அடைந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. தற்போது ஒன்றிரண்டு நாடுகளுக்கு பரவ தொடங்கி உள்ளது.

    இதன் வீரியம் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒமிக்ரான் வைரசை கண்டறியும் சோதனை வசதி தமிழகத்தில் உள்ள 12 அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 நகரங்களில் 12 அரசு ஆய்வகங்களில் இந்த சோதனை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகிய அரசு ஆய்வகங்களில் தொற்று கண்டறியும் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இந்த ஆய்வகங்களில் டேக்பாத் என்ற கிட் மூலம் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிந்த பிறகு,  மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இதன் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இதையும் படியுங்கள்.. வேலூரில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவு
    கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
    பெங்களூரு :

    தென்ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அது இங்கிலாந்து, இஸ்ரேல் உள்பட பிற நாடுகளுக்கும் பரவியுள்ளது. இது அதிகவேகமாக பரவக்கூடிய தன்மையை கொண்டதால், உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களால் இங்கு கொரோனா பரவல் அதிகரிப்பது மேல்நோட்டமாக தெரியவந்துள்ளது. கேரளாவில் இருந்து வரும் துணை மருத்துவ பணியாளர்களால் தொற்று பரவுகிறது. அதனால் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மைசூரு எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனால் கேரளாவில் இருந்து வருபவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    தென்ஆப்பிரிக்கா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் பரவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் இதுவரை அந்த புதிய வகை கொரோனா பரவவில்லை.

    தார்வார், மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அந்த விடுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தார்வார் எஸ்.டி.எம். மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    அந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மைசூருவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து அதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். புதிய வகை கொரோனா பரவியுள்ள தென்ஆப்பிரிக்கா உள்பட 3 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு ‘பூஸ்டர்' டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்குமாறு கேட்டு இருக்கிறோம். வணிக வளாகம், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் அரசு-தனியார் அலுவலகங்களில் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

    கடந்த 16 நாட்களில் கேரளாவில் இருந்து கர்நாடகம் வந்த மாணவர்களை மீண்டும் ஒரு முறை கொேரானா பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறை புத்தாண்டு கொண்டாட்டத்தை அனுமதிப்பது குறித்து வரும் நாட்களில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    மேல்-சபை தேர்தல் பிரசாரத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதலை பின்பற்றும்படி அறிவுறுத்தி உள்ளேன்.

    மாநிலத்தில் தற்போது 80 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. மாநிலத்தில் இதுவரை 91 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளோம். டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

    இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
    முககவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட அரசின் தடுப்பு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருந்தது.
    மும்பை :

    கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை. ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

    ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது. தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவை தவிர்த்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது.

    இந்தநிலையில் மராட்டியத்தில் புதிய வகை வைரசால் பாதிப்பு ஏற்படுவதை மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் கொரோனா பரவலை தடுக்க புதிய அறிவிப்புகள் மற்றும் உத்தரவுகள் வெளியிடப்பட்டது.

    முககவசம் அணியாமல் செல்வது உள்ளிட்ட அரசின் தடுப்பு விதிகளை மீறும் தனி நபருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு எச்சரித்து இருந்தது.

    இந்தநிலையில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தற்போது மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரம், மற்றும் ஒமிக்ரானை மராட்டியத்திற்குள் வரவிடாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

    அப்போது அவர், "புதிய வகை ஆட்கொல்லி வைரஸ் வராமல் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். மத்திய அரசின் உத்தரவுக்காக காத்திருக்காமல் வேலையை உடனே தொடங்குகள்" என்றார். மேலும் அவர், "மாநிலத்தில் மீண்டும் ஒரு லாக்டவுன் வராமல் இருக்க பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்." என்றார்.

    இதேபோல விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
    தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியம் திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    மும்பை:

    தென்ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்தின் தோம்பிவிலி நகருக்கு திரும்பிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை கல்யாண் தோம்பிவிலி மாநகராடசி உறுதி செய்து உள்ளது.

    அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அதில் அந்த நபருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். அவருடைய குடும்பத்தினரின் பிற நபர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பரிசோதனைகள் சேகரிக்கப்பட உள்ளன.

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    வெளிநாடுகளில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கொரோனா இல்லை என்று பொதுமக்கள் கவன குறைவாக இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

    ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து கேரளா வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    உலகமெங்கும் மிரட்டிய கொரோனா வைரஸ் தொற்று இப்போது உருமாறி, புதிய வகை ஒமிக்ரான் தொற்றாக பரவ தொடங்கி உள்ளது. ஒமிக்ரான் கொரோனா வீரியம் மிக்கது என்றும், இதன் பாதிப்பு முந்தைய பாதிப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்தநிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஒமிக்ரான் கொரோனா பரவல் இல்லை. என்றாலும் மாநிலத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வருவோர் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும்.

    ஒமிக்ரான் வைரஸ்

    குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.
    ஆம்ஸ்டர்டாம்:

    ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

    அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோன்று, தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.  இதில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என டச்சு நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.
    காத்மண்டு:

    கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  டெல்டா, டெல்டா பிளஸ் என அடுத்தடுத்த வடிவங்களை கொண்டு பரவலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

    அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

    வைரஸ்

    இந்த நிலையில், ஒமிக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தென்ஆப்பிரிக்காவில் இருந்து பயணிகள் வருவதற்கு நேபாளம் தடை விதித்து உள்ளது.  அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
    டெல் அவிவ்:

    கொரோனா வைரஸ் தொற்று தோன்றி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னமும் அந்த கொடிய வைரஸ் உலக நாடுகள் மீதான தனது கோரப்பிடியை தளர்த்தவில்லை.

    ஆழிப்பேரலை போல அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி வருகிறது. எனினும் தடுப்பூசி எனும் பெரும் ஆயுதம் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி வருகிறது.

    இந்தநிலையில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள அந்த வைரஸ் தனது எல்லையை வேகமாக விரித்து வருகிறது.

    தென்ஆப்பிரிக்காவை தவிர்த்து, இன்னும் பிற நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    அதில் இஸ்ரேலும் ஒன்று. அங்கு இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக உலக நாடுகள் பலவும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணத் தடை விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக வெளிநாட்டு பயணிகளின் வருகைக்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது.

    விமானம்

    அனைத்து நாடுகளை சேர்ந்த பயணிகளும் இஸ்ரேல் வருவதற்கு 14 நாட்கள் தடை விதிக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    ஒமிக்ரான் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் பயணத்தடை அறிவித்த முதல் நாடு இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் மந்திரி சபை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு முதல் இந்த பயணத்தடை அமலுக்கு வந்தது.

    இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்பு தடயங்களை கண்காணிக்க சர்ச்சைக்குரிய தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆனால் இது மக்களின் தனியுரிமையை மீறும் செயல் என இஸ்ரேலின் மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

    இதற்கிடையே அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஓமன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை அறிவித்துள்ளன.

    ×