search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி
    X
    நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

    நெதர்லாந்தில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி

    தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.
    ஆம்ஸ்டர்டாம்:

    ஒமிக்ரான் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.  ஜெர்மனியிலும் முதன்முறையாக இதன் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

    அந்நாட்டின் முனிச் நகரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  தென்ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவருக்கு இதன் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இங்கிலாந்து நாட்டிலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோன்று, தென்ஆப்பிரிக்காவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு வந்த விமான பயணிகள் 624 பேரிடம் கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடந்தது.  இதில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    அவர்களில் 13 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என டச்சு நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×