search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நாடியா சாலை விபத்து- இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்

    நாடியா சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில், இறந்தவரின் உடலை ஏற்றிக்கொண்டு சுடுகாட்டில் இறுதிச்சடங்கு செய்வதற்காக சுமார் 35 பேர் சென்றுகொண்டிருந்த வாகனம் இன்று அதிகாலையில் விபத்தில் சிக்கியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அந்த வாகனம் மோதியதில், 18 பேர் பலியாகினர். சிலர் காயமடைந்தனர். பனிமூட்டம் காரணமாக முன்னால் நின்றிருந்த லாரி தெரியாததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விபத்தில் உருக்குலைந்த வாகனம்

    இந்நிலையில், நாடியா சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறி உள்ளார்.

    மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×