என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிற்சாலைக்குள் புகுந்து மிரட்டிய யானைகள் கூட்டம்- பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்
Byமாலை மலர்21 Sep 2021 6:17 AM GMT (Updated: 21 Sep 2021 6:17 AM GMT)
பாலக்காடு வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து 4 மணி நேரம் போராடி 18 யானைகளையும் காட்டுக்குள் விரட்டினர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கஞ்சிக்கோடு. இது தொழில் பேட்டைகள் நிறைந்த ஒரு சிறிய நகரமாகும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
கஞ்சிகோடு , வாளையார் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் வந்து விளைபொருட்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஊருக்குள் புகும் யானைகளை பொதுமக்களும், வனத்துறையினரும் காட்டுக்குள் விரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கஞ்சிக்கோட்டில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் காட்டுக்குள் இருந்து சுமார் 18 யானைகள் வந்து முகாமிட்டது.
இதனால் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த யானை கூட்டம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் சுவரை இடித்து தள்ளியது. அப்போது அங்கிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றனர். இந்த செய்தி காட்டு தீய போல பரவியது. உடனே ஊர் மக்கள் யானை கூட்டத்தை பார்க்க அங்கு திரண்டனர்.
இதுகுறித்து பாலக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து 4 மணி நேரம் போராடி 18 யானைகளையும் காட்டுக்குள் விரட்டினர்.
கேரள மாநிலம் பாலக்காடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கஞ்சிக்கோடு. இது தொழில் பேட்டைகள் நிறைந்த ஒரு சிறிய நகரமாகும். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளது. ஆயிரத்துக்கு மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
கஞ்சிகோடு , வாளையார் மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளதால் இங்கு அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் வந்து விளைபொருட்களை சேதப்படுத்தி வருகிறது. அதேபோல் மக்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்தும் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஊருக்குள் புகும் யானைகளை பொதுமக்களும், வனத்துறையினரும் காட்டுக்குள் விரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை கஞ்சிக்கோட்டில் உள்ள ஒரு தொழிற்சாலைக்குள் காட்டுக்குள் இருந்து சுமார் 18 யானைகள் வந்து முகாமிட்டது.
இதனால் தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் அந்த யானை கூட்டம் அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் சுவரை இடித்து தள்ளியது. அப்போது அங்கிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றனர். இந்த செய்தி காட்டு தீய போல பரவியது. உடனே ஊர் மக்கள் யானை கூட்டத்தை பார்க்க அங்கு திரண்டனர்.
இதுகுறித்து பாலக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பட்டாசுகளை வெடித்து 4 மணி நேரம் போராடி 18 யானைகளையும் காட்டுக்குள் விரட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X