search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானைகள்"

    • சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.
    • தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அருவங்காடு:

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள காட்டு யானைகள் மலை அடிவாரத்தில் உள்ள குன்னூர்- மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அதேநேரத்தில் சமவெளி பகுதியில் உள்ள யானைகள், போதிய தண்ணீர் மற்றும் உணவை தேடி மலைப்பகுதிக்கு செல்கின்றன.

    இதற்கிடையே கே.என்.ஆர் மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்றிரவு குன்னூர் ரன்னிமேடு ரெயில் நிலைய பகுதிக்கு வந்தன. பின்னர் அவை அங்கிருந்த இலை-தளைகளை தின்றுவிட்டு அருகிலுள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குடித்துவிட்டு, பின்னர் ரெயில் தண்டவாள பாதைகளில் முகாமிட்டு நடமாடி வருகிறது.

    இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரெயில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும் காட்டு யானைகள் கூட்டம் சாலையோரம் உள்ள ரெயில் குகையினுள் புகுந்தால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பதால், குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் ஊழியர்கள், தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலை ரெயில்பாதை மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுதவிர நீலகிரி மலைப்பாதையில் செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையாக பயணம் செல்ல வேண்டும், வனவிலங்குகளை கண்டால் எக்காரணத்தை முன்னிட்டும் அருகில் சென்று புகைப்படம் எடுக்கக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.
    • யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுவதால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    அதிலும் சமீப காலமாக யானைக் கூட்டங்கள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சோமசுந்தரம் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவில் புகுந்த 3 காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 50-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.

    இதனால் விவசாயிக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

    சேதமடைந்த வாழை மரங்களுக்கும், பாக்கு மரங்களுக்கும் வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார்.
    • யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டு காட்சியளிக்கின்றன.

    இதனால் உணவு, குடிநீரை தேடி யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள வாழை, தென்னைகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் இந்த பகுதியில் விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் இரவு நேரங்களில் தங்களது தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டுயானைகள் கூட்டம் தாளவாடி அடுத்த மல்லன்குழி என்ற பகுதியில் உள்ள கிரி என்பவரின் விவசாய தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை யானை கூட்டம் மிதித்து சேதப்படுத்தியது. அப்போது தோட்ட காவலில் இருந்த விவசாயிகள் யானைகள் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தார்.

    பின்னர் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. எனினும் யானை கூட்டங்கள் மிதித்து சேதப்படுத்தியதில் 500-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகள் கடும் சேதம் அடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தோட்ட உரிமையாளர் கிரி தெரிவித்தார். தனக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கடந்த சில நாட்களாகவே தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் யானை கூட்டங்கள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே இரவு நேரத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். யானைக்காக வெட்டப்பட்ட அகழிகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன.
    • அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையை ஒட்டி 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூங்கா உள்ளது. வனப்பகுதியை ஒட்டி பூங்கா அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் இந்த சாலையை கடந்து செல்வது வழக்கம்.

    நேற்று முன்தினம் இரவு வனப் பகுதியை விட்டு வெளியேறிய இரு காட்டு யானைகள் பண்ணாரி சாலை வந்து அங்கிருந்து பவானிசாகர் பகுதிக்கு வந்தது. சிறிது நேரத்தில் பவானிசாகர் பூங்கா தடுப்பு கேட், கம்பி வேலியை இடித்து சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு வந்த பூங்கா ஊழியர்கள் யானைகள் இருப்பதை கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

    பின்னர் ஊழியர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டினர். மீன் பண்ணை வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் யானைகள் சென்றன.

    வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வெளியேறும் யானைகளால் பயிர்கள் அதிக அளவில் சேதமாகி வருகின்றன. வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள், ஆழமாக இல்லாததால் மண் மூடி கிடக்கிறது. வனத்தை ஒட்டி உள்ள காராச்சிக் கொரை பகுதியில் யானை தடுப்பு அகழிகள் வெட்டவில்லை. இதனால் யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து விடுகிறது. அட்டகாசம் செய்து வரும் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர்.
    • யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை, தூதூர்மட்டம், கிரேக்மோர் உள்ளிட்ட பகுதியில், கடந்த ஒரு மாதமாக 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவற்றை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் அவை காட்டுக்குள் செல்லாமல், தேயிலை தோட்டத்துக்குள் தஞ்சம் புகுந்து உள்ளன. மேலும் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், குடியிருப்பு பகுதிகளில் உலாவந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் 5 காட்டு யானைகள் இன்று அதிகாலை 4 மணியளவில் நாக்குநெறி கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்குள்ள பழனியம்மாள் என்பவருக்கு சொந்தமான வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருட்களை சூறையாடியது. மேலும் சமையல் எண்ணெயை குடித்து ருசி பார்த்தது. அந்த நேரத்தில் பழனியம்மாள் வீட்டில் எவரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

    பின்னர் அந்த காட்டு யானைகள் பக்கத்தில் உள்ள கிருஷ்ணகுமார் என்பவரது வீட்டின் கதவை உடைக்க முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக விழித்துக்கொண்டு, வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி சென்றனர்.

    இதற்கிடையே கிராமமக்கள் திரண்டுவந்து தீப்பந்தம் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டினர். பின்னர் அந்த யானைகள் கூட்டம் வழக்கம்போல் அருகே உள்ள வனத்திற்குள் சென்றுவிட்டது.

    எங்கள் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து மனுநீதிநாள் முகாம், வனத்துறை அலுவலகம் மட்டுமின்றி கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து உள்ளோம். ஆனாலும் அந்த யானைகள் கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினர் இன்று வரையிலும் திணறி வருகின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பாக, எங்கள் பகுதியில் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகளை கும்கிகள் மூலம் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.
    • வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்த 10 காட்டு யானைகளில் 8 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.

    குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் இரவும் பகலும் பாராமல் யானைகளை கண்காணித்து பொதுமக்களுக்கு இடையூறின்றி விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று மாலை குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டபுள் ரோடு பகுதியில் யானைகள் சாலையை கடந்தது.

    இந்த யானைகள் நேராக டபுள் ரோடு அருகே உள்ள மயான பகுதிக்குள் சென்று அங்குள்ள குழி மேடுகளை துவம்சம் செய்து மயான பகுதி முழுவதையும் சேதப்படுத்தியது.

    தொடர்ந்து அந்த பகுதிகளில் சுற்றி திரிந்த யானை கூட்டம், அங்கிருந்து நகர்ந்து வேறு பகுதிக்கு சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குடியிருப்பையொட்டிய பகுதிகளில் யானை நடமாடி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனர்.

    • கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.
    • யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, கடம்பூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதியில் ரூ.50 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தி.மு.க. எம்.பி. ஆ.ராசா தொடங்கி வைத்தார்.

    விழாவில் கலந்து கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கடம்பூர் செல்வதற்காக அடர்ந்த வனப்பகுதியில் கேர்மாளம் நோக்கி ஆ.ராசா எம்.பி. வாகனம் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம், வனத்துறையினர் வாகனம் சென்று கொண்டிருந்தது.

    கேர்மாளம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது அந்த வாகனங்களை வழிமறித்து சாலையின் நடுவே 3 யானைகள் கூட்டம் நின்று கொண்டிருந்தன.

    மேலும் வாகனங்களை பார்த்து யானை சத்தமாகப் பிளிரியது. யானைக்கூட்டம் நடுரோட்டில் இருந்து வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கேயே வழிமறித்து நின்றது. பிறகு வனத்துறையினர் ஜீப் மூலம் அதிக சத்தம் கொண்ட ஒலிகளை எழுப்பினர்.

    அதனைத்தொடர்ந்து அந்த யானைக்கூட்டம் சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் ஆ.ராசா எம்.பி. வாகனம் வனப்பகுதியை கடந்து சென்றது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது.
    • காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் அவை இரவுநேரத்தில் அடர்ந்த காட்டுக்கு திரும்பி சென்றன.

    ஒரு குட்டியானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து, வழிதவறி பன்னிமடை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்தது. இதனை அடுத்த நாள் காலையில் பார்த்த தேயிலை தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த குட்டி யானையை மீட்டு உணவளித்து பராமரித்தனர்.

    தொடர்ந்து பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாய் யானையுடன் சேர்ப்பதென வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக அந்த குட்டி யானையின் தாயை இனம் கண்டறியும் வகையில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது காட்டு யானைகள் கூட்டம், பன்னிமடை அடிவாரப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். குட்டியானை தாயுடன் ஒன்றுசேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது. அந்த கூட்டத்தில் தாயுடன் சேர்ந்த குட்டி யானையும் இருந்தது. பின்னர் அவை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தன. அப்போது குட்டியானை தண்ணீரை கண்டதும் உற்சாகம் அடைந்தது. தொடர்ந்து ஆற்றுக்குள் இறங்கி உற்சாகமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது.

    அப்போது குட்டி யானைக்கு பாதுகாவலாக தாயும் ஆற்றுக்குள் இறங்கி குளித்தது. பின்னர் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றுவிட்டன.

    ஆற்றங்கரை பகுதியில் குட்டி யானை தண்ணீரில் நீந்தி விளையாடி மகிழும் அரிய காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். இதற்காக அவை அடிவாரப்பகுதியில் ஓடும் ஆற்றுக்கு வந்து செல்லும்.

    குறிப்பாக மதியம் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவும் செய்யும். இதன் ஒரு பகுதியாகதான் இந்த குட்டி யானை ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து குளித்துவிட்டு சென்று உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.
    • சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் பிறந்து சில நாட்களே ஆன குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி திரிகின்றன.

    இந்த யானைகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

    நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் கே.என்.ஆர் என்ற பகுதியில் 10 யானைகள் மலை சரிவிலிருந்து சாலையை கடக்க முயற்சித்தது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை கண்காணித்தனர். மேலும் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர்.

    1 மணி நேரத்திற்கு பின்னர் யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னர் போக்குவரத்து தொடங்கியது.

    இது தொடர்பாக குன்னூர் வனச்சரகர் ரவீந்திரன் கூறியதாவது:-

    மலைப்பாதையில் காட்டு யானைகள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதாகவும், அவற்றிற்கு தொல்லை கொடுக்க கூடாது, புகைப்படம் எடுக்க கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    அதனையும் மீறி சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஏ. என். ஆர் பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் சாலையை கடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு நின்றிருந்த கோவையை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் யானை கூட்டத்தை தொந்தரவு செய்யும் வகையில் செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

    இதனை பார்த்த வனத்துறையினர் விரைந்து சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து ரூ.1000 அபராதம் விதித்தனர்.

    • காரமடை-மஞ்சூர் சாலையில் கூட்டமாக சுற்றி திரிகிறது

    மேட்டுப்பாளையம், 

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மேட்டுப்பா ளையம் காரமடை சிறுமுகை பகுதியில் எண்ணற்ற வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக காட்டுயானை, மான், கரடி, சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானை களின் கூட்டம் அதிக அளவில் உள்ளது.

    அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் சாலை யை கடக்கும் யானைகள் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் காரமடை- வெள்ளியங்காடு சாலையில் ஓரமாக யானை கூட்டம் ஒன்று குட்டியுடன் உலா வந்தது.

    இதனை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ க்கள் சமூக வலைத்த ளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • பகலில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது
    • டிரோன் காமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானா ம்பள்ளி ஆகிய வனச்சரக ங்களில் சுமார் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானை கள் உள்ளன. அவை தற்போது அடிக்கடி ஊரு க்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்தநிலையில் வால்பாறை அடுத்த புதுதோ ட்டம், கருமலை, அக்கா மலை, சின்னக்கல்லார், சிறுகுன்றா, நல்லமுடி பூஞ்சோலை, பன்னிமேடு, சேக்கள்முடி, உருளிகல் ஆகிய எஸ்டேட் பகுதியில் தற்போது காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ளதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

    எனவே வால்பாறை, மானாம்பள்ளி வனச்சர கத்தின் வேட்டை தடுப்பு காவலர்கள் டிரோன் காமிரா மூலம் யானைகள் பதுங்கி உள்ளதாக கருத ப்படும் பகுதிகளில் தீவிர மாக ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்துக்குள் சுமார் 15 காட்டு யானைகள் குட்டி யுடன் படுத்து தூங்குவது தெரியவந்து உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் எஸ்டேட் பகுதிகளில் குட்டிகளுடன் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளை அடர்ந்த பகுதிக்கு விரட்டும் பணி களில் ஈடுபட்டு வருகின்ற னர்.

    வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை சேதப்படு த்துகின்றன. பின்னர் விளைநிலங்களுக்குள் புகு ந்து அங்கு விளையும் பயிர்களையும் நாசப்படுத்தி வருகின்றன.

    அவை இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு களை சேதப்படுத்துகிறது. பகல்நேரங்களில் தேயிலைத் தோட்டத்தில் சுற்றி வருகிறது.

    எனவே தேயிலை தோட்டங்களில் தஞ்சம் புகுந்து உள்ள காட்டு யானைகளை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனத்துறை யினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மாவட்ட வன அதிகாரி இளையராஜா தகவல்
    • யானை கூட்டம் அடிக்கடி உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல் லும் சாலையில் யானை களின் நடமாட்டம் அதிக ரித்து வருகின்றன. இந்த சாலையில் கோதமடக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 5 யானைகள் சாலை யை மறித்தவாறு நடுவே நின்று கொண்டிருந்தன.

    அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யானை கூட்டத்தை கண்டு பீதியடைந்தனர். இதை யடுத்து சாலையின் இருபக்க மும் தங்களது வாகனங்களை ஓரமாக நிறுத்திவிட்டு மரண பயத்துடன் யானை கூட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தனர். ஆனால், அந்த யானை கூட்டம் சாலையை விட்டு நகராமல் வெகுநேரமாக நின்று கொண்டிருந்தன. சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அந்த யானை கூட்டம் சாலையை விட்டு மெல்ல... மெல்ல நகரத் தொடங்கின.

    இதையடுத்து சாலை யோரமாக வாகனங்களில் காத்திருந்த மின்வாரிய ஊழியர்கள், ரப்பர் கழக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே அங்கி ருந்து வேகமாக புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல் யானை கூட்டம் அடிக்கடி பேச்சிப்பாறை சாலையில் உலா வருவதால் தொழிலாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, வனத்துறையினர் யானைகளின் நட மாட்டத்தை கண்காணித்து சாலை வழியாக செல்லும் தொழிலாளர்கள், மின் வாரிய ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா கூறியதாவது:-

    வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில் யானை கூட்டம், கேரள வன பகுதிகளில் சுற்றி திரிவது வழக்கம். இந்த நிலையில் தற்போது கன்னி யாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் புல் மற்றும் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ள தால் அவற்றை உணவுக்காக யானைகள் தேடி வருவ துண்டு.

    தற்போது பேச்சிப்பாறை முதல் கோதையாறு வரை யானைகள் நடமாடி வருவ தாக கூறப்படும் பகுதி யானைகளின் வழித்தடங்கள் என்ற பட்டியலில் உள்ள பகுதிகளில் மட்டுமே அவை உலா வந்துகொண்டு இருக் கின்றன. முன்னர் ரப்பர் தோட் டங்களில் வாழை ஊடு பயிராக போடப்பட்டு இருந்ததால் அவற்றை உண்ண யானைகள் வரும். ஆனால், தற்போது வாழை களுக்கு பதிலாக அன்னாசி பழங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதன் காரணமாகவும் யானைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதேநேரம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் வராமல் இருக்க வேலிகள் அமைக்கப்பட் டுள்ளது. மற்றபடி யானை கள் அவற்றின் வழித்தடங் களில் மட்டுமே நடமாடி வருகிறது.

    குறிப்பிட்ட சீசன் முடிவ டைந்ததும் இந்த யானைகள் இடம் பெயர்ந்து விடுவது வழக்கம். எனினும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு யானை வராமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வரு கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×