என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துங்கள் -கேரளாவுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்
Byமாலை மலர்27 Aug 2021 4:44 PM GMT (Updated: 27 Aug 2021 4:44 PM GMT)
நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலை அளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறி உள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிக அளவிலேயே உள்ளது. கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டியே பதிவாகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தும்படி மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரள மாநில தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், நாட்டில் உள்ள கொரோனா பாதிப்புகளில் கேரளா முதலிடத்தில் உள்ளது கவலை அளிப்பதாகவும், ஓணம் பண்டிகைக்கு பிறகு சமீபத்திய பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாநிலத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதேபோல் மகாராஷ்டிராவிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமைச் செயலாளருக்கு ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X