என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மிரட்டல் - 2 பேர் அதிரடி கைது
Byமாலை மலர்11 Aug 2021 6:32 AM GMT (Updated: 11 Aug 2021 6:32 AM GMT)
முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு பெங்களூருவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
திருவனந்தபுரம்:
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. முதல்-மந்திரிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் எர்ணாகுளம் அருகே உள்ள வைக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர், முதல்-மந்திரி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது. சிவகுமாரின் நண்பர் ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கியுள்ளனர். அந்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது.
இதேபோன்று முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு பெங்களூருவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சேலத்தில் பதுங்கியிருந்த அவரை கேரள போலீசார் கைது செய்தனர்.
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் மற்றும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. முதல்-மந்திரிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் எர்ணாகுளம் அருகே உள்ள வைக்கம் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர், முதல்-மந்திரி அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பியதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியது. சிவகுமாரின் நண்பர் ஒருவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் தாக்கியுள்ளனர். அந்த போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார், முதல்-மந்திரியின் அலுவலகத்திற்கு மிரட்டல் கடிதம் அனுப்பியது தெரிய வந்தது.
இதேபோன்று முதல்-மந்திரி பினராயி விஜயனின் அலுவலகத்திற்கு பெங்களூருவை சேர்ந்த பிரேம்ராஜ் என்பவர் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சேலத்தில் பதுங்கியிருந்த அவரை கேரள போலீசார் கைது செய்தனர்.
முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் மற்றும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X