search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான சேவை
    X
    விமான சேவை

    சர்வதேச விமான சேவைக்கு 31-ந் தேதி வரை தடை நீட்டிப்பு

    குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. நேற்றுடன் தடை முடிவடைய இருந்த நிலையில், இம்மாதம் 31-ந் தேதிவரை தடை நீட்டிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

    அதே சமயத்தில், ஒப்பந்த அடிப்படையில், குறிப்பிட்ட 24 நாடுகளுக்கு விமான போக்குவரத்து நீடிக்கும். சரக்கு விமான சேவையும் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    Next Story
    ×