search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 3,604 பேருக்கு கொரோனா: 11 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 89 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 64 ஆயிரத்து 636 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 3,604 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 34 ஆயிரத்து 630 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 89 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 743 ஆக அதிகரித்துள்ளது.

    ஒரே நாளில் 7,699 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 98 ஆயிரத்து 822 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 1 ஆயிரத்து 42 ஆக குறைந்துள்ளது. பெங்களூரு நகரில் அதிகபட்சமாக 788 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மைசூருவில் 478 பேர், தட்சிண கன்னடவில் 454 பேர், ஹாசனில் 322 பேர், குடகில் 115 பேர், மண்டியாவில் 109 பேர், சிவமொக்காவில் 177 பேர், கோலாரில் 101 பேர், பெலகாவியில் 143 பேர், சிக்கமகளூருவில் 126 பேர், குடகில் 115 பேர், துமகூருவில் 116 பேர், உடுப்பியில் 97 பேர், தாவணகெரேயில் 118 பேருக்கு
    கொரோனா
    பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் வைரஸ் தொற்று பாதிப்பு 100-க்கும் கீழ் பதிவாகியுள்ளது.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் பெங்களூரு நகரில் 11 பேரும், தட்சிண கன்னடாவில் 15 பேரும், மைசூருவில் 15 பேரும், பல்லாரியில் 8 பேரும், தார்வாரில் 6 பேரும் என மொத்தம் 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 11 மாவட்டங்களில் புதிதாக யாரும் இறக்கவில்லை.
    Next Story
    ×