என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிளஸ்-2 மதிப்பெண்களை ஜூலை 31-ந்தேதிக்குள் வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வுகளை மத்திய அரசு ரத்து செய்தது.
இதையடுத்து தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்வதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தன.
மாணவர்களுக்கு மதிப்பெண் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கன்வில்கர் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தி வருகிறது.
இதேபோல மாநிலங்களில் பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மாநில அரசுகளுக்கு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பிளஸ்-2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடும் முறையை அடுத்த 10 நாளில் மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். பிளஸ்-2 தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைத்து மாநிலங்களிலும் ஜூலை 31-ந்தேதிக்குள் மதிப்பெண்களை மாநில அரசுகள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்