என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வீதிக்கு வரும்: பாஜக
Byமாலை மலர்21 Jun 2021 3:48 AM GMT (Updated: 21 Jun 2021 3:48 AM GMT)
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
பெங்களூரு
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற இப்போது இருந்த தந்திரம் வகுத்து வருகிறார். இதனால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடக்கிறது.
சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதல்-மந்திரி தானே என்று கூற சொல்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற இப்போது இருந்த தந்திரம் வகுத்து வருகிறார். இதனால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடக்கிறது.
சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதல்-மந்திரி தானே என்று கூற சொல்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X