என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திங்கட்கிழமை முதல் மெட்ரோ ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்கலாம் - டெல்லி அரசு அனுமதி
Byமாலை மலர்5 Jun 2021 5:52 PM GMT (Updated: 5 Jun 2021 5:52 PM GMT)
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா-வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரம் தணியத் தொடங்கியிருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களும் படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் வரும் திங்கட்கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, டெல்லி சந்தைகள், வணிக வளாகங்கள் ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் அடிப்படையில் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அதேபோல், மெட்ரோ-ரெயில்கள் 50 சதவீத பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அரசு அலுவலகங்களில் குரூப்-ஏ பிரிவு ஊழியர்கள் 100 சதவீதம் வருகை தரவேண்டும். குரூப் -பி பிரிவு ஊழியர்கள் 50 சதவீதத்தினர் வருகை தரவேண்டும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X