search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜிபுரா பகுதியில் நேற்று மாலை நின்றுகொண்டிருந்த பொதுமக்களில் 2 பேர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து தாக்குதல் நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். 
    Next Story
    ×