என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜூன் 1-ந் தேதிக்கு பிறகும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்: உத்தவ் தாக்கரே
Byமாலை மலர்28 May 2021 1:36 AM GMT (Updated: 28 May 2021 1:36 AM GMT)
ஜூன் 1-ந் தேதிக்கு பிறகும் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும், சில நாட்களுக்கு பிறகு தான் படிப்படியாக தளர்வுகள் செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
மும்பை :
மகாராஷ்டிராவில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி தற்போது அதன் தாக்கம் தணிந்து உள்ளது.
கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஊரடங்கை போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த மாதம் தொடக்கம் முதல் மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வருகிற 1-ந் தேதி காலை 7 மணியுடன் முடிகிறது.
எனவே அதன்பிறகு மாநிலத்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான கருத்தை நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவாரும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
மந்திரி சபை கூட்டத்தின் போது, மாநிலத்தில் உள்ள கொரோனா பரவல் நிலவரம் விவரமாக விளக்கி கூறப்பட்டது. அப்போது மாநிலத்தில் 36 மாவட்டங்களில் 21-ல் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே தற்போது ஒரே அடியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியாக இருக்காது என மந்திரி சபையில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு சதவீதம் குறைவாக உள்ள பகுதிகளில் வேண்டுமானால் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் மந்திரி சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-
10 முதல் 15 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சதவீதம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இது தவிர கருப்பு பூஞ்சை நோய் மிரட்டி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்த அளவுக்கு தற்போது தினசரி தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து தேவைப்படுகிறது.
நடைமுறையில் உள்ள ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு ஒட்டுமொத்தமாக விலக்கி கொள்ளப்படாது. மாறாக கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். சில நாட்களுக்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் செய்யப்படும். இது தொடர்பாக மந்திரி சபையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் 2-வது கொரோனா அலை அசுர வேகத்தில் பரவி தற்போது அதன் தாக்கம் தணிந்து உள்ளது.
கடந்த ஏப்ரல் 14-ந் தேதி முதல் ஊரடங்கை போன்ற கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால், இந்த மாதம் தொடக்கம் முதல் மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வருகிற 1-ந் தேதி காலை 7 மணியுடன் முடிகிறது.
எனவே அதன்பிறகு மாநிலத்தில் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான கருத்தை நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை மந்திரி விஜய் வடேடிவாரும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்த பிறகு மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே நிருபர்களிடம் கூறியதாவது:-
மந்திரி சபை கூட்டத்தின் போது, மாநிலத்தில் உள்ள கொரோனா பரவல் நிலவரம் விவரமாக விளக்கி கூறப்பட்டது. அப்போது மாநிலத்தில் 36 மாவட்டங்களில் 21-ல் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது. எனவே தற்போது ஒரே அடியாக கட்டுப்பாடுகளை தளர்த்துவது சரியாக இருக்காது என மந்திரி சபையில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு சதவீதம் குறைவாக உள்ள பகுதிகளில் வேண்டுமானால் ஒருசில தளர்வுகள் இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் மந்திரி சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-மந்திரி அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-
10 முதல் 15 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் சதவீதம் தொடர்ந்து அதிகமாகவே உள்ளது. இது தவிர கருப்பு பூஞ்சை நோய் மிரட்டி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்த அளவுக்கு தற்போது தினசரி தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து தேவைப்படுகிறது.
நடைமுறையில் உள்ள ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஜூன் 1-ந் தேதிக்கு பிறகு ஒட்டுமொத்தமாக விலக்கி கொள்ளப்படாது. மாறாக கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். சில நாட்களுக்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் செய்யப்படும். இது தொடர்பாக மந்திரி சபையில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X