search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    புதிய பாதிப்பு மீண்டும் 2 லட்சத்தை தாண்டியது... இந்தியாவில் கொரோனா நிலவரம்

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24.95 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்கிறது. அதேசமயம் உயிரிழப்பு அதிகரிப்பது கவலை அளிப்பதாக உள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாள் புதிய பாதிப்பு 2 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில், மீண்டும் 2 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 2,71,57,795 ஆக உயர்ந்துள்ளது. 

    தடுப்பூசி போடும் பணி

    நாடு முழுவதும் ஒரே நாளில் 4,157 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,11,388 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,43,50,816 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,95,955 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.15 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 89.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதம் 11.45 ஆகவும், தினசரி பாதிப்பு விகிதம் 9.42 ஆகவும் உள்ளது. இதன்மூலம் தினசரி பாதிப்பு விகிதம் தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக 10 சதவீதத்திற்கும் கீழ் உள்ளது.

    சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 24.95 லட்சமாக குறைந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 24,95,591 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 20,06,62,456 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×