என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகத்திற்கு 2.62 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு: சதானந்தகவுடா
Byமாலை மலர்8 May 2021 3:04 AM GMT (Updated: 8 May 2021 3:04 AM GMT)
வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு :
மத்திய மந்திரி சதானந்தகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்த ஒதுக்கீட்டில் 13.6 சதவீதம் ஆகும். கடந்த ஏப்ரல் 21-ந் தேதி பல்வேறு மாநிலங்களுக்கு 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கர்நாடகத்தின் பங்கு 5.75 சதவீதமாக இருந்தது.
இவ்வாறு சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரதமருக்கும், மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி சதானந்தகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்த ஒதுக்கீட்டில் 13.6 சதவீதம் ஆகும். கடந்த ஏப்ரல் 21-ந் தேதி பல்வேறு மாநிலங்களுக்கு 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கர்நாடகத்தின் பங்கு 5.75 சதவீதமாக இருந்தது.
இவ்வாறு சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரதமருக்கும், மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X