என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அனில் அம்பானி நடைபயிற்சி சென்றதால் சர்ச்சை
Byமாலை மலர்4 May 2021 2:19 AM GMT (Updated: 4 May 2021 2:19 AM GMT)
மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள தனியார் கோல்ப் பந்து மைதானத்தில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை :
மராட்டியத்தில் அதிவேக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. குறிப்பாக மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசமான சத்தாரா மாவட்டம் மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள தனியார் கோல்ப் பந்து மைதானத்தில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த மைதானத்தை மூட மகாபலேஷ்வர் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைமை அதிகாரி பல்லவி பட்டேல் கூறுகையில், ‘‘அனில் அம்பானி குடும்பத்தினருடன் மைதானத்தில் நடை பயிற்சி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்த பிறகு, அந்த கோல்ப் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பினோம்.. தற்போது அந்த மைதானம் மூடப்பட்டுவிட்டது. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை’’ என்றார்.
மராட்டியத்தில் அதிவேக கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. குறிப்பாக மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொதுஇடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இயற்கை எழில் கொஞ்சும் மலை பிரதேசமான சத்தாரா மாவட்டம் மகாபலேஷ்வர் பகுதியில் உள்ள தனியார் கோல்ப் பந்து மைதானத்தில் பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் நடைபயிற்சி செல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த மைதானத்தை மூட மகாபலேஷ்வர் நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி தலைமை அதிகாரி பல்லவி பட்டேல் கூறுகையில், ‘‘அனில் அம்பானி குடும்பத்தினருடன் மைதானத்தில் நடை பயிற்சி செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவின் உண்மை தன்மையை ஆய்வு செய்த பிறகு, அந்த கோல்ப் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பினோம்.. தற்போது அந்த மைதானம் மூடப்பட்டுவிட்டது. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X