என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தீஸ்கரில் சோகம் - மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 கொரோனா நோயாளிகள் பலி
Byமாலை மலர்18 April 2021 1:14 AM GMT (Updated: 18 April 2021 1:16 AM GMT)
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டம் திகரப்பரா பகுதியில் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும், கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று மாலை திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால், பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு முழுவதும் பரவியது. இதனால், ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் பலர் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த மீட்புக்குழுவினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்தில் சிக்கிக்கொண்ட நோயாளிகளையும் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதில், 29 கொரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தீவிபத்தில் சிக்கி ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேரில் 4 பேர் தீ விபத்தால் ஏற்பட்ட புகையில் மூச்சுத்திணறியும், ஒருவர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X